திருப்பூர் : தொடர் மழையின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் : தொடர் மழையின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக நேற்று மாலை முதல் திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நொய்யல் கரையோரம் உள்ள பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேலும், திருப்பூர் மங்கலம் பகுதியில் இருந்து ராயபுரம் வழியாக செல்லக்கூடிய நொய்யல் ஆற்றில் நுரையுடன் கூடிய வெள்ளநீர் சென்றது. மழையின் காரணமாக உருவான வெள்ளப்பெருக்கை பயன்படுத்தி முறையாக இயங்கும் சாய சலவை பட்டறைகள் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலந்து விட்டதால், நுரை ஏற்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகித்தனர். சில பகுதிகளில் மழை காரணமாக சாக்கடை நீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

அணைப்பாளையம் பகுதியில் மங்கலம் மற்றும் கல்லூரி சாலையை இணைக்கக்கூடிய தரைப்பாலம் நொய்யல் ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக மூழ்கியது இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் சுமார் 6 கிலோ மீட்டர் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நேற்றைய தினம் முதல் விடாது மழை பெய்து வருவதன் காரணமாக இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக நேற்று மாலை முதல் திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நொய்யல் கரையோரம் உள்ள பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேலும், திருப்பூர் மங்கலம் பகுதியில் இருந்து ராயபுரம் வழியாக செல்லக்கூடிய நொய்யல் ஆற்றில் நுரையுடன் கூடிய வெள்ளநீர் சென்றது. மழையின் காரணமாக உருவான வெள்ளப்பெருக்கை பயன்படுத்தி முறையாக இயங்கும் சாய சலவை பட்டறைகள் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலந்து விட்டதால், நுரை ஏற்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகித்தனர். சில பகுதிகளில் மழை காரணமாக சாக்கடை நீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

அணைப்பாளையம் பகுதியில் மங்கலம் மற்றும் கல்லூரி சாலையை இணைக்கக்கூடிய தரைப்பாலம் நொய்யல் ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக மூழ்கியது இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் சுமார் 6 கிலோ மீட்டர் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நேற்றைய தினம் முதல் விடாது மழை பெய்து வருவதன் காரணமாக இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
