கோவை : அதிகாலை முதல் இடைவிடாமல் பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை மாநகரின் பல்வேறு சாலைகள் மற்றும் மேம்பாலங்களின் அடியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை : அதிகாலை முதல் இடைவிடாமல் பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை மாநகரின் பல்வேறு சாலைகள் மற்றும் மேம்பாலங்களின் அடியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை முதல் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனிடையே, கோவை மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. காந்திபுரம், ரயில்நிலைய சாலை, நஞ்சப்பா சாலை, மரக்கடை, கூட்ஸ் செட் சாலை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழைநீர் வழிந்து ஓடி வருகிறது.

இதன் காரணமாக, வாகன ஒட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும், வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேலை மற்றும் பள்ளி, கல்லூரி முடித்து வீடு திரும்புபவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், கோவை நகரின் பிரதான சாலையான அவிநாசி சாலை மேம்பாலத்தின் அடியில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. ரயில்வே பாலத்திற்கு ஒரு அடி வரை வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக, அச்சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல, கோவை அரசு மருத்துவமனை அருகேயுள்ள ரயில்வே பாலம் மற்றும் வடகோவை மேம்பாலத்திற்கு அடியில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை முதல் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனிடையே, கோவை மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. காந்திபுரம், ரயில்நிலைய சாலை, நஞ்சப்பா சாலை, மரக்கடை, கூட்ஸ் செட் சாலை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழைநீர் வழிந்து ஓடி வருகிறது.

இதன் காரணமாக, வாகன ஒட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும், வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேலை மற்றும் பள்ளி, கல்லூரி முடித்து வீடு திரும்புபவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், கோவை நகரின் பிரதான சாலையான அவிநாசி சாலை மேம்பாலத்தின் அடியில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. ரயில்வே பாலத்திற்கு ஒரு அடி வரை வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக, அச்சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல, கோவை அரசு மருத்துவமனை அருகேயுள்ள ரயில்வே பாலம் மற்றும் வடகோவை மேம்பாலத்திற்கு அடியில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.