கோவை : வனவிலங்குகள் மற்றும் மாநில அரசின் சின்னங்களை விமான நிலையங்களில் காட்சிப்படுத்த அனுமதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவை விமான நிலையம் முழுவதிலும் மாநில பூச்சியான பட்டாம்பூச்சியின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன.
கோவை : வனவிலங்குகள் மற்றும் மாநில அரசின் சின்னங்களை விமான நிலையங்களில் காட்சிப்படுத்த அனுமதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவை விமான நிலையம் முழுவதிலும் மாநில பூச்சியான பட்டாம்பூச்சியின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன.

கோவை விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகளின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, அதன் தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்கள் எழுதப்பட்டுள்ளது. பொதுவாக, பட்டாம்பூச்சிகளை சாதாரணமாகவே நம்மால் காண முடியும். ஆனால், மாநிலஅரசின் பூச்சி சின்னமான 'தமிழ் மறவன்', காமன் பேண்டுடு பீகாக், கிரிம்சன் ரோஸ், காமன் ரோஸ் மற்றும் லைம் பட்டர்ஃபிளை ஆகியவை அரிதான பட்டாம்பூச்சிகளாகும்.

"கோவையில் அதிகளவில் தென்படும் பூச்சி இனம் என்பதால், பட்டாம்பூச்சிகளின் ஸ்டிக்கர்கள் விமான நிலையத்தில் ஒட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டது. இங்கு வரும் மக்களுக்கு இது போன்ற உயிரினங்களும் இங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்," என்கிறார் பட்டாம்பூச்சிகள் அமைப்பைச் சேர்ந்த மோகன் பிரசாத்.

"இயற்கை மற்றும் கலாச்சாரத்தின் சான்றாக கோவை விமான நிலையத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என விமான நிலைய மேலாளர் ஆர். மகாலிங்கம் கூறினார்.

ஏற்கனவே, யானைகள், நீலகிரி வரையாடு மற்றும் கலாச்சாரத்தின் சின்னமான ஜல்லிக்கட்டு காளைகள் கோவை விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவை விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகளின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, அதன் தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்கள் எழுதப்பட்டுள்ளது. பொதுவாக, பட்டாம்பூச்சிகளை சாதாரணமாகவே நம்மால் காண முடியும். ஆனால், மாநிலஅரசின் பூச்சி சின்னமான 'தமிழ் மறவன்', காமன் பேண்டுடு பீகாக், கிரிம்சன் ரோஸ், காமன் ரோஸ் மற்றும் லைம் பட்டர்ஃபிளை ஆகியவை அரிதான பட்டாம்பூச்சிகளாகும்.

"கோவையில் அதிகளவில் தென்படும் பூச்சி இனம் என்பதால், பட்டாம்பூச்சிகளின் ஸ்டிக்கர்கள் விமான நிலையத்தில் ஒட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டது. இங்கு வரும் மக்களுக்கு இது போன்ற உயிரினங்களும் இங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்," என்கிறார் பட்டாம்பூச்சிகள் அமைப்பைச் சேர்ந்த மோகன் பிரசாத்.

"இயற்கை மற்றும் கலாச்சாரத்தின் சான்றாக கோவை விமான நிலையத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என விமான நிலைய மேலாளர் ஆர். மகாலிங்கம் கூறினார்.

ஏற்கனவே, யானைகள், நீலகிரி வரையாடு மற்றும் கலாச்சாரத்தின் சின்னமான ஜல்லிக்கட்டு காளைகள் கோவை விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.