கோவை : கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள பார்சல் ஆபிஸ் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை : கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள பார்சல் ஆபிஸ் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை ரயில் நிலையம் பின்புறம் பார்சல் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டிடம் இன்று அதிகாலை சுமார் 3.35 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை ரயில் நிலைய போலீசாரும், தீயணைப்பு துறையினரும் மீட்டனர். இதில், இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த பவிளமணி, இப்ராகிம் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில், கோவை ரயில் நிலையத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழந்த பவிளமணி, இப்ராகிம் ஆகியோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர். மேலும், இறந்து போன பவளமணியின் மகனுக்கு வேலையும், மகளின் படிப்பு செலவையும் அரசே ஏற்க வேண்டும் எனவும், அரசு துறையில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை யாரும் இதுவரை சந்திக்கவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல், உரிய இழப்பீடு கிடைக்கும் வரை இருவரின் உடல்களை வாங்கப்போவதில்லை எனக் கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.


கோவை ரயில் நிலையம் பின்புறம் பார்சல் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டிடம் இன்று அதிகாலை சுமார் 3.35 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை ரயில் நிலைய போலீசாரும், தீயணைப்பு துறையினரும் மீட்டனர். இதில், இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த பவிளமணி, இப்ராகிம் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில், கோவை ரயில் நிலையத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழந்த பவிளமணி, இப்ராகிம் ஆகியோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர். மேலும், இறந்து போன பவளமணியின் மகனுக்கு வேலையும், மகளின் படிப்பு செலவையும் அரசே ஏற்க வேண்டும் எனவும், அரசு துறையில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை யாரும் இதுவரை சந்திக்கவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல், உரிய இழப்பீடு கிடைக்கும் வரை இருவரின் உடல்களை வாங்கப்போவதில்லை எனக் கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
