நீலகிரி : தொடர் கனமழை பெய்து வருவதால், நீலகிரி மாவட்டத்திற்கு வருபவர்கள் வாகனங்களை மிகவும் கவனமாக இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி : தொடர் கனமழை பெய்து வருவதால், நீலகிரி மாவட்டத்திற்கு வருபவர்கள் வாகனங்களை மிகவும் கவனமாக இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 4 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. சாலையின் குறுக்கே மரங்கள் விழுவதால் போக்குவரத்தும் அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. எனவே, சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் பொதுமக்களும் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு வருபவர்கள் வாகனங்களை மிகவும் கவனமாக இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் சூறைக்காற்று வீசி வருவதால் உதகை படகு இல்லத்தில் படகுகளின் சேவை திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பார்சன் வேலியில் உள்ள பம்ப் ஹவுசின் மின்மாற்றியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் உதகை நகருக்கு முறையான குடிநீர் வழங்கும் பணியும் தடைபட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 4 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. சாலையின் குறுக்கே மரங்கள் விழுவதால் போக்குவரத்தும் அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. எனவே, சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் பொதுமக்களும் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு வருபவர்கள் வாகனங்களை மிகவும் கவனமாக இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் சூறைக்காற்று வீசி வருவதால் உதகை படகு இல்லத்தில் படகுகளின் சேவை திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பார்சன் வேலியில் உள்ள பம்ப் ஹவுசின் மின்மாற்றியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் உதகை நகருக்கு முறையான குடிநீர் வழங்கும் பணியும் தடைபட்டுள்ளது.