கோவை : மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 36,000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்படுவதால், இன்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை : மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 36,000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்படுவதால், இன்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், ஓராண்டிற்குப் பிறகு அணையில் இருந்து மதகுகள் வழியே தண்ணீர் திறக்கப்பட்டது. கேரளாவின் அட்டப்பாடி, சிறுவானி பகுதிகளிலும் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாகவும், பில்லூர் அணை நிரம்பி உபரி நீரானது வெளியேற்றப்படுகிறது. நேற்று இரவும் மேற்கு தொடர்ச்சி மலை காடுகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நீடிக்கும் கன மழையால், பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று 20,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் நான்கு மதகுகள் வழியே 36,000 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பவானி ஆற்றில் பெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
எனவே, பவானி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை 4-வது நாளாக இன்றும் விடுக்கப்பட்டுள்ளது. ஆலாங்கொம்பு, லிங்காபுரம், வச்சினம்பாளையம், நில்லித்துரை உள்ளிட்ட கரையோர மக்கள் இரவு நேரங்களில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.