நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூர், நடுவட்டம், உதகை மற்றும் குந்தா பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாக 4-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூர், நடுவட்டம், உதகை மற்றும் குந்தா பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாக 4-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கிய தென்மேற்கு பருவமழை 7-வது நாளாக தொடர்ந்து இன்றும் இடைவிடாமல் பெய்து வருகின்றது. காற்றுடன் கூடிய தொடர்மழை காரணமாக ஆங்காங்கே சாலை ஓர மரங்கள் விழுந்து வருவதால் போக்குவரத்தில் அவ்வப்போது பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மழையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால் நகரில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகின்றது. இதனால், உதகையில் மழையுடன் கடும் குளிரும் நிலவுவதால், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களும் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி உள்ளது. இதன் காரணமாக, வியாபார நிலையங்களிலும் வியாபாரம் வெகுவாக பாதித்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தொடர் மழை காரணமாக அதிகமாக மழை பெய்யும் குந்தா, உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட நான்கு தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் 4-வது நாளாக இன்றும் விடுமுறை அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கிய தென்மேற்கு பருவமழை 7-வது நாளாக தொடர்ந்து இன்றும் இடைவிடாமல் பெய்து வருகின்றது. காற்றுடன் கூடிய தொடர்மழை காரணமாக ஆங்காங்கே சாலை ஓர மரங்கள் விழுந்து வருவதால் போக்குவரத்தில் அவ்வப்போது பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மழையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால் நகரில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகின்றது. இதனால், உதகையில் மழையுடன் கடும் குளிரும் நிலவுவதால், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களும் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி உள்ளது. இதன் காரணமாக, வியாபார நிலையங்களிலும் வியாபாரம் வெகுவாக பாதித்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தொடர் மழை காரணமாக அதிகமாக மழை பெய்யும் குந்தா, உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட நான்கு தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் 4-வது நாளாக இன்றும் விடுமுறை அறிவித்துள்ளது.