கோவை ரயில் நிலையம் அருகே பார்சல் ஆபீஸ் இடிந்த சம்பவம் ; 2 பேர் பலி
கோவை : கோவை இரயில் நிலையம் பின்புறம் உள்ள பார்சல் ஆபிஸ் இடிந்து விழுந்த சம்பவத்தில் இருவர் பலி ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை ரயில் நிலையம் பின்புறம் பார்சல் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டிடம் சுமார் 3 கால் மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க ரயில் நிலைய போலீசாரும் தீயணைப்பு துறையினரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் இடிபாடுகளில் சிக்கிய மணி என்பவரை மீட்டு ரயில் நிலைய போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் அவருக்கு தலை பகுதியில் ஏற்பட்ட பலத்த காயத்தால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதேபோல இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மற்றொருவரும் பலியாகியுள்ளார். ஆனால் அவரது பெயர் மற்றும் தகவல்கள் தெரியவில்லை. தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் இடிபாடுகளுக்குள் வேறு யாரேனும் சிக்கி கொண்டு இருக்கின்றாரா என்று தேடி வருகின்றனர்.
'