கோவை : கோவை மாவட்ட காவல் எல்லையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்ய வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை : கோவை மாவட்ட காவல் எல்லையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்ய வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரின் உத்தரவின் பேரில், போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கஞ்சா, போதை மாத்திரை போன்றவற்றை முழுவதுமாக ஒழிக்கும் நோக்கில் தொடர்ந்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, போதைப்பொருள் பயன்பாட்டாளர்களும், விற்பனையாளர்களும் தனிப்படை போலீசாரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யும் நோக்கில் கார் ஒன்றில் மூன்று பேர் பச்சாபாளையம் அருகே வந்துள்ளனர். இந்த ரகசிய தகவல் அறிந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரின் உத்தரவின் பேரில், துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையிலான பேரூர் காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி, உதவி ஆய்வாளர் ஜான் ரோஸ் தலைமை காவலர்கள் மணிவண்ணன், ரவிசங்கர் ஆகியோர் அடங்கிய குழுவினர் சந்தேகத்துக்கிடமான காரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து, போலீசார் காரை சோதனை செய்தபோது, காரில் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.
பின்னர், தொண்டாமுத்தூரைச் சேர்ந்த ஷேக் அப்துல் காதர் (23), செல்வபுரம் எல்.ஐ.சி காலனியைச் சேர்ந்த அனுப் ரகுமான் (23), சுண்டக்காமுத்தூர் பகுதியைச் சேர்ந்த திஜேஸ்வர் சபரி (22) ஆகியோர் மீது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்த 22 ஸ்லிப்பில் உள்ள 220 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அத்துடன் அவர்கள் ஓட்டி வந்த காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர், போலீசார் நீதிமன்ற காவலுக்கு படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரின் உத்தரவின் பேரில், போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கஞ்சா, போதை மாத்திரை போன்றவற்றை முழுவதுமாக ஒழிக்கும் நோக்கில் தொடர்ந்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, போதைப்பொருள் பயன்பாட்டாளர்களும், விற்பனையாளர்களும் தனிப்படை போலீசாரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யும் நோக்கில் கார் ஒன்றில் மூன்று பேர் பச்சாபாளையம் அருகே வந்துள்ளனர். இந்த ரகசிய தகவல் அறிந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரின் உத்தரவின் பேரில், துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையிலான பேரூர் காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி, உதவி ஆய்வாளர் ஜான் ரோஸ் தலைமை காவலர்கள் மணிவண்ணன், ரவிசங்கர் ஆகியோர் அடங்கிய குழுவினர் சந்தேகத்துக்கிடமான காரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து, போலீசார் காரை சோதனை செய்தபோது, காரில் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.
பின்னர், தொண்டாமுத்தூரைச் சேர்ந்த ஷேக் அப்துல் காதர் (23), செல்வபுரம் எல்.ஐ.சி காலனியைச் சேர்ந்த அனுப் ரகுமான் (23), சுண்டக்காமுத்தூர் பகுதியைச் சேர்ந்த திஜேஸ்வர் சபரி (22) ஆகியோர் மீது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்த 22 ஸ்லிப்பில் உள்ள 220 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அத்துடன் அவர்கள் ஓட்டி வந்த காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர், போலீசார் நீதிமன்ற காவலுக்கு படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.