உதகை மலை ரயில் தனியார்மயமாக்கப்படுவதை தொடக்க நிலையிலையே தடுத்து நிறுத்த வேண்டும் : இயக்குநர் கவுதமன் வலியுறுத்தல்

கோவை : உதகை மலை ரயில் தனியார்மயமாக்கப்படுவதை தொடக்க நிலையிலையே தடுத்து நிறுத்த வேண்டும் என திரைப்பட இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.

கோவை : உதகை மலை ரயில் தனியார்மயமாக்கப்படுவதை தொடக்க நிலையிலையே தடுத்து நிறுத்த வேண்டும் என திரைப்பட இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும், திரைப்பட இயக்குநருமான கவுதமன் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டது சரியான செயல் அல்ல. கறைபடிந்த செயலாக இது வரலாற்றில் பார்க்கப்படும். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இருகட்சிகளுமே காஷ்மீர் மக்களுக்கு துரோகம் செய்து விட்டது. காஷ்மீர் இணைப்பின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் குப்பையில் போடப்பட்டு உள்ளது. ஒரே நாடு, ஒரே சட்டம் என அமல்படுத்த முயன்றாலும், எந்த காலத்திலும் அதை நடைமுறைப்படுத்த முடியாது. 



உதகை ரயில் தனியாரிடம் ஒப்படைப்பதால் சாதாரண மக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்படும். உதகை ரயில் தனியார்மயமாக்கப்படுவது துவக்க வேலையிலே நிறுத்த வேண்டும். சூயஸ் திட்டம் தண்ணீருக்கு கை ஏந்தும் நிலையை ஏற்படுத்தவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மக்களால் விரட்டி அடிக்கப்பட்ட நிறுவனம் சூயஸ். ஆறு குளங்கள் அடமானம் வைப்பதை ஏற்க மாட்டோம். ஜி.எஸ்.டி.யால் பல நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டது. இரட்டை வரியை மத்திய, மாநில அரசு பரிசீலனை செய்ய வேண்டும், என அவர் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...