நீலகிரி : தொடர் மழையின் காரணமாக உதகையில் - மைசூர் சாலையில் உள்ள பைக்காரா பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், வாகனங்களை கவனமுடன் இயக்க வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
நீலகிரி : தொடர் மழையின் காரணமாக உதகையில் - மைசூர் சாலையில் உள்ள பைக்காரா பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், வாகனங்களை கவனமுடன் இயக்க வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு முதல் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது இதன் காரணமாக, பைக்காரா பகுதியில் உள்ள தடுப்பு சுவர் இடிந்து சாலையின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டது. எனவே, ஒவ்வொரு வாகனங்களாக நிறுத்தி அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், விபத்துக்கள் நேரும் அபாயம் உள்ளதால், வாகனங்களை மிகவும் கவனமுடன் இயக்க காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு முதல் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது இதன் காரணமாக, பைக்காரா பகுதியில் உள்ள தடுப்பு சுவர் இடிந்து சாலையின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டது. எனவே, ஒவ்வொரு வாகனங்களாக நிறுத்தி அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், விபத்துக்கள் நேரும் அபாயம் உள்ளதால், வாகனங்களை மிகவும் கவனமுடன் இயக்க காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.