டெல்லி : இந்திய வனங்களில் சிறுத்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக, ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து சிறுத்தைகளை இறக்குமதி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
டெல்லி : இந்திய வனங்களில் சிறுத்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக, ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து சிறுத்தைகளை இறக்குமதி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இந்தியாவில் உள்ள காடுகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை ஈடுகட்ட தென்னாப்ரிக்கா, நமீபியா ஆகிய நாடுகளில் இருந்து 'ஆப்ரிக்க சிறுத்தை'களை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. சிறுத்தைகளில், ஆசிய, ஆப்ரிக்க சிறுத்தைகள் என இரண்டு வகைகள் உள்ளன. ஆசிய சிறுத்தைகளை விட ஆப்ரிக்க சிறுத்தைகள் மிக வேகமாக ஓடக்கூடியவை. மான், காட்டெருமை போன்ற விலங்குகளை வேட்டையாடி இவை உண்ணும். கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் சிறுத்தைகள் இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், மத்திய இந்திய காடுகளிலும் அதிகமாக வாழ்ந்து வந்தன. அதிகளவு வேட்டையாடப்பட்டதால் இந்த இனம் வெகுவாக குறைந்து விட்டது. இன்றைய நிலையில், ஆசிய இன சிறுத்தைகள் சில காடுகளிலும், உயிரியல் பூங்காக்களிலும் வாழ்கின்றன.
இந்த நிலையில், இந்திய வனங்களில் சிறுத்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ஆப்ரிக்க நாடுகளான தென்னாப்ரிக்கா, நமீபியா ஆகியவற்றில் இருந்து 'ஆப்ரிக்கா சிறுத்தை'களைக் கொண்டு வந்து, இங்குள்ள காப்புக்காடுகளில் வளர்க்க திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், சிறுத்தைகளுக்குள் மோதல்கள் நடந்ததாக எந்தவிதமான செய்திகளும் வெளியாகாத நிலையில், ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து சிறுத்தைகளை இறக்குமதி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இந்தியாவில் உள்ள காடுகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை ஈடுகட்ட தென்னாப்ரிக்கா, நமீபியா ஆகிய நாடுகளில் இருந்து 'ஆப்ரிக்க சிறுத்தை'களை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. சிறுத்தைகளில், ஆசிய, ஆப்ரிக்க சிறுத்தைகள் என இரண்டு வகைகள் உள்ளன. ஆசிய சிறுத்தைகளை விட ஆப்ரிக்க சிறுத்தைகள் மிக வேகமாக ஓடக்கூடியவை. மான், காட்டெருமை போன்ற விலங்குகளை வேட்டையாடி இவை உண்ணும். கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் சிறுத்தைகள் இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், மத்திய இந்திய காடுகளிலும் அதிகமாக வாழ்ந்து வந்தன. அதிகளவு வேட்டையாடப்பட்டதால் இந்த இனம் வெகுவாக குறைந்து விட்டது. இன்றைய நிலையில், ஆசிய இன சிறுத்தைகள் சில காடுகளிலும், உயிரியல் பூங்காக்களிலும் வாழ்கின்றன.
இந்த நிலையில், இந்திய வனங்களில் சிறுத்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ஆப்ரிக்க நாடுகளான தென்னாப்ரிக்கா, நமீபியா ஆகியவற்றில் இருந்து 'ஆப்ரிக்கா சிறுத்தை'களைக் கொண்டு வந்து, இங்குள்ள காப்புக்காடுகளில் வளர்க்க திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், சிறுத்தைகளுக்குள் மோதல்கள் நடந்ததாக எந்தவிதமான செய்திகளும் வெளியாகாத நிலையில், ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து சிறுத்தைகளை இறக்குமதி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.