தேச மற்றும் ஜனநாயக விரோத அரசாக மத்திய அரசு செயல்படுகிறது : திருப்பூர் எம்.பி., கே. சுப்பராயன் குற்றச்சாட்டு

திருப்பூர் : தேச மற்றும் ஜனநாயக விரோத அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருவது முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே நிரூபணம் ஆகி விட்டதாக திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : தேச மற்றும் ஜனநாயக விரோத அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருவது முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே நிரூபணம் ஆகி விட்டதாக திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- மத்திய அரசின் முதல் கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி சில மசோதாக்களை நிறைவேற்றியிருப்பதன் மூலம் தேச விரோத, ஜனநாயக விரோத அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருவதை முதல் கூட்டத்தொடரிலேயே நிரூபணம் செய்துள்ளது. ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே ரேசன் என்னும் மத்திய அரசு, ஒரே சாதி என்பதை வலியுறுத்தாதது ஏன்..?, இதன்மூலம் மேல் ஆதிக்க சாதியினருக்கான சர்க்கார் என்பதையும் நிரூபணம் செய்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள அரசோ, தமிழக நலனில் அக்கறை இல்லாமல் மோடியின் கொத்தடிமைகளாக மாறிவிட்டார்களோ என்ற சந்தேகம் நிலவக்கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவை ஆட்சி செய்வது கூட்டு அமைச்சரவை அல்ல, மோடி, அமித்ஷா மட்டும்தான். அவர்கள் சொல்லுவதைக் கேள்வியே இல்லாமல் நிறைவேற்றும் பணீயினைத்தான் மத்திய அமைச்சரவை செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரலைக் கேட்க மத்திய அரசு இல்லை. அதனால், மக்கள் மத்தியில் தெரியப்படுத்தி ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டத்தை இடதுசாரிகள் முன்னெடுப்போம், என தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...