அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருப்பூர் : குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் : குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 50-வது வார்டு பட்டுக் கோட்டையார் நகர் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குழாயில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, சாக்கடை நீரானது அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல், வாரக்கணக்கில் குப்பைகளை அல்லாத காரணத்தால் குப்பைகள் மலைபோல் தேங்கி உள்ளதோடு, நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 



மேலும், 8 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வரும் சூழ்நிலை இருந்து வருவதாகவும், அதுவும் இரண்டு மணி நேரம் மட்டுமே வருவதாகக் கூறும் பொதுமக்கள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்குவதோடு, அடிப்படை.வசதிகளை செய்து தர கோரி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பிரச்சனைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...