கோவை : மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உருவப் படத்திற்கு கோவை பா.ஜ.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கோவை : மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உருவப் படத்திற்கு கோவை பா.ஜ.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ், கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. இந்த நிலையில், மருத்துவ சிகிச்சை பெற்று வந்த சுஷ்மா சுவராஜிற்கு நேற்று திடீனெ மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், மண்டல பொறுப்பாளர் ஜி.கே. செல்வகுமார் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். சுஷ்மா சுவராஜ் மறைவை ஈடுசெய்ய முடியாத இழப்பு எனவும், மாற்று கட்சியினருடன் நல்ல நட்புறவு கொண்ட தலைவராக இருந்தவர் எனவும் அக்கட்சியினர் கூறினர். மேலும், இலங்கை தமிழர் மறுவாழ்விற்கு அதிக அக்கறை காட்டியவர் எனக் கூறிய கோவை மாவட்ட பா.ஜ.க.வினர், மேலும் டிவிட்டர் மூலம் தகவல்களை சிறப்பாக செயல்படுத்தியவர் சுஷ்மா சுவராஜ் எனவும், இளம் வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற புகழ் பெற்றவர் மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் என அக்கட்சியினர் தெரிவித்தனர்.
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ், கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. இந்த நிலையில், மருத்துவ சிகிச்சை பெற்று வந்த சுஷ்மா சுவராஜிற்கு நேற்று திடீனெ மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், மண்டல பொறுப்பாளர் ஜி.கே. செல்வகுமார் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். சுஷ்மா சுவராஜ் மறைவை ஈடுசெய்ய முடியாத இழப்பு எனவும், மாற்று கட்சியினருடன் நல்ல நட்புறவு கொண்ட தலைவராக இருந்தவர் எனவும் அக்கட்சியினர் கூறினர். மேலும், இலங்கை தமிழர் மறுவாழ்விற்கு அதிக அக்கறை காட்டியவர் எனக் கூறிய கோவை மாவட்ட பா.ஜ.க.வினர், மேலும் டிவிட்டர் மூலம் தகவல்களை சிறப்பாக செயல்படுத்தியவர் சுஷ்மா சுவராஜ் எனவும், இளம் வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற புகழ் பெற்றவர் மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் என அக்கட்சியினர் தெரிவித்தனர்.