கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 55 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 55 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 55 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட உதவி ஆணையர்கள் வி. சரவணன், என். அண்ணாதுரை, ஆர். மோகனசுந்தரி ஆகியோர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில், மண்டல உதவி ஆணையர்கள் ரா.ரவி, செந்தில்குமார் ரத்தினம், ம. செல்வன், ஏ.ஜே. செந்தில் அரசன், மகேஷ்கனகராஜ், செயற்பொறியாளர் ஞானவேல், செயற்பொறியாளர் (திட்டம்) எஸ். ரவிச்சந்திரன், நகர்நல அலுவலர் மரு.கே. சந்தோஷ்குமார், மாநகர கல்வி அலுவலர் கே. பழனி, கணக்கு அலுவலர்கள் லட்சுமி பிரபா (குடிநீர் பிரிவு) மற்றும் மாநகராட்சியின் அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 55 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட உதவி ஆணையர்கள் வி. சரவணன், என். அண்ணாதுரை, ஆர். மோகனசுந்தரி ஆகியோர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில், மண்டல உதவி ஆணையர்கள் ரா.ரவி, செந்தில்குமார் ரத்தினம், ம. செல்வன், ஏ.ஜே. செந்தில் அரசன், மகேஷ்கனகராஜ், செயற்பொறியாளர் ஞானவேல், செயற்பொறியாளர் (திட்டம்) எஸ். ரவிச்சந்திரன், நகர்நல அலுவலர் மரு.கே. சந்தோஷ்குமார், மாநகர கல்வி அலுவலர் கே. பழனி, கணக்கு அலுவலர்கள் லட்சுமி பிரபா (குடிநீர் பிரிவு) மற்றும் மாநகராட்சியின் அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.