டெல்லி : நடப்பாண்டில் ஏற்கெனவே மூன்று முறை ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், இன்றைய நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
டெல்லி : நடப்பாண்டில் ஏற்கெனவே மூன்று முறை ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், இன்றைய நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.35 சதவீதம் குறைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்த ஆண்டு மூன்று முறை ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ளது. கடந்த 3 நிதிக் கொள்கைக் குழு கூட்டங்களில் தலா 0.25% சதவீதம் குறைக்கப்பட்டது. கடந்த மூன்று முறையைப் போல இந்த முறையும் 0.25% சதவீதம் மட்டுமே குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கணிப்பைவிடக் கூடுதலாக 0.10% ரெப்போ வட்டி குறைந்துள்ளது. தற்போதைய ரெப்போ வட்டி 5.4% ஆக உள்ளது. இது ஏப்ரல் 2010-க்குப் பின் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த அளவு வட்டி விகிதம் ஆகும்.
ஆறு உறுப்பினர்கள் கொண்ட ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவில் சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட நான்கு பேர் ரெப்போ வட்டி விகிதத்தை 0.35 சதவீதம் குறைக்க வேண்டும் என வாக்களித்துள்ளனர். மற்ற இருவர் 0.25 சதவீதம் குறைத்தால் போதும் என வாக்களித்துள்ளனர். வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாகவும் குறைத்து கணிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் ஜி.டி.பி. வளர்ச்சி 5.8 சதவீதம் முதல் 6.6 சதவீதம் வரை இருக்கக்கூடும் எனவும் ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது. இந்த வட்டி விகிதக் குறைப்பு எதிரொலியாக கடன்கள் மீதான வட்டி விகிதம் மேலும் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.35 சதவீதம் குறைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்த ஆண்டு மூன்று முறை ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ளது. கடந்த 3 நிதிக் கொள்கைக் குழு கூட்டங்களில் தலா 0.25% சதவீதம் குறைக்கப்பட்டது. கடந்த மூன்று முறையைப் போல இந்த முறையும் 0.25% சதவீதம் மட்டுமே குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கணிப்பைவிடக் கூடுதலாக 0.10% ரெப்போ வட்டி குறைந்துள்ளது. தற்போதைய ரெப்போ வட்டி 5.4% ஆக உள்ளது. இது ஏப்ரல் 2010-க்குப் பின் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த அளவு வட்டி விகிதம் ஆகும்.
ஆறு உறுப்பினர்கள் கொண்ட ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவில் சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட நான்கு பேர் ரெப்போ வட்டி விகிதத்தை 0.35 சதவீதம் குறைக்க வேண்டும் என வாக்களித்துள்ளனர். மற்ற இருவர் 0.25 சதவீதம் குறைத்தால் போதும் என வாக்களித்துள்ளனர். வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாகவும் குறைத்து கணிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் ஜி.டி.பி. வளர்ச்சி 5.8 சதவீதம் முதல் 6.6 சதவீதம் வரை இருக்கக்கூடும் எனவும் ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது. இந்த வட்டி விகிதக் குறைப்பு எதிரொலியாக கடன்கள் மீதான வட்டி விகிதம் மேலும் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.