கோவை : "உண்மையை உயர்த்தி பிடிப்போம் - நீதியை நிலைநாட்டுவோம்" என்பதை மையக் கருத்தாகக் கொண்டு தொடர் பிரச்சாரம் செய்யப்போவதாக இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்தனர்.
கோவை : "உண்மையை உயர்த்தி பிடிப்போம் - நீதியை நிலைநாட்டுவோம்" என்பதை மையக் கருத்தாகக் கொண்டு தொடர் பிரச்சாரம் செய்யப்போவதாக இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்தனர்.
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினரின் செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அப்போது அவ்வமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது :- "உண்மையை உயர்த்தி பிடிப்போம் - நீதியை நிலைநாட்டுவோம்" என்பதை மையக் கருத்தாக கொண்டு ஆக்ஸ்ட் 1 முதல் செப்டம்பர் 30 ம் தேதி வரை அகில இந்திய அளவில் தொடர் பிரச்சாரம் செய்ய உள்ளோம். தற்போதைய காலகட்டத்தில் மாணவ சமூகத்தினர் தகுதி தேர்வு, கல்வி கட்டண கொள்ளை, நீட், நெக்ஸ்ட் என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதனால், இன்றைய மாணவர் சமுதாயத்தின் நிலை கேள்வி குறியாக ஆகிவிட்டது.
இது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த தொடர் பிரச்சாரம் நடக்க உள்ளது. மேலும், தங்களது மாணவர் அமைப்பு 20 மாநிலங்களில் உள்ளது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இது கொண்டு செல்லப்படும், என்றனர்.
தொடர்ந்து, 370-வது சட்டப்பிரிவு காஷ்மீரில் அமல்படுத்தியுள்ளது குறித்த கேள்விக்கு அவர்கள் பதிலளித்ததாவது :- இது ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல். அங்குள்ள மக்களுடன் கலந்து ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாக செயல்பட்டு மத்திய அரசு எடுத்துள்ள முடிவு இது. இந்த விவகாரம் தொடர்பாக இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு தங்களது கண்டனத்தைப் பதிவிட்டுள்ளது. காஷ்மீரில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களை தடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை, என்றனர்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவ்வமைப்பின் மாநில ஆலோசனை குழு உறுப்பினர் நிசார், முன்னாள் மாநில தலைவர் சிக்கந்தர், செயலாளர் சபீர், மாநில கல்வி வளாக செயலாளர் ஆஷிக், கோவை மாவட்ட செயலாளர் ஆரிப் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.