கோவை : சின்ன தடாகம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி தடாகம் பகுதி மக்கள் கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : சின்ன தடாகம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி தடாகம் பகுதி மக்கள் கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பெரிய நாயக்கன் பாளையம் ஒன்றியம் சின்ன தடாகம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகும், பணிகள் நடைபெறவில்லை எனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது :- கடந்த 2017-18 மற்றும் 19-ம் ஆண்டு கிராம சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதுவரை வரவு - செலவு கணக்குகள் தாக்கல் செய்யவில்லை. மேலும், குடிநீர் பிரச்சனை உள்ளதால் அதனை முறைபடுத்தி விநியோகம் செய்யப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சிக்கு உட்பட்ட பணியாளர்கள் வருவதில்லை. போர்வெல் மூலம் வழங்கப்படும் குடிநீரில் அதிக உப்பு தன்மை உள்ளதால், குழந்தைகள், முதியவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
சாக்கடை அடைப்பு காரணமாக சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. தெருக்களில் கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும், பேருந்து நிலையம் அருகே சிமெண்ட் குழாயை அகற்றி, குறுகிய பாலம் அமைத்திட வேண்டும், குடிநீர் மேல்நிலை தொட்டி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளதால் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும், என வலியுறுத்தினர்.
பெரிய நாயக்கன் பாளையம் ஒன்றியம் சின்ன தடாகம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகும், பணிகள் நடைபெறவில்லை எனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது :- கடந்த 2017-18 மற்றும் 19-ம் ஆண்டு கிராம சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதுவரை வரவு - செலவு கணக்குகள் தாக்கல் செய்யவில்லை. மேலும், குடிநீர் பிரச்சனை உள்ளதால் அதனை முறைபடுத்தி விநியோகம் செய்யப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சிக்கு உட்பட்ட பணியாளர்கள் வருவதில்லை. போர்வெல் மூலம் வழங்கப்படும் குடிநீரில் அதிக உப்பு தன்மை உள்ளதால், குழந்தைகள், முதியவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
சாக்கடை அடைப்பு காரணமாக சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. தெருக்களில் கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும், பேருந்து நிலையம் அருகே சிமெண்ட் குழாயை அகற்றி, குறுகிய பாலம் அமைத்திட வேண்டும், குடிநீர் மேல்நிலை தொட்டி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளதால் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும், என வலியுறுத்தினர்.