கோவை : தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் இன்று மீண்டும் மூடப்பட்டுள்ளது.
கோவை : தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் இன்று மீண்டும் மூடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் அருவியின் வெள்ளம் அதிகரித்து வருகிறது. ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகள் பராமரிப்பு பணிகளுக்காக கோவை குற்றாலம் மூடப்படுவது வழக்கம். இந்த நிலையில், அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவாணி அணையின் நீர் இருப்பு 23.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 255 மி.மீ., மழையும், மலையின் அடிவாரத்தில் 34 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் அருவியின் வெள்ளம் அதிகரித்து வருகிறது. ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகள் பராமரிப்பு பணிகளுக்காக கோவை குற்றாலம் மூடப்படுவது வழக்கம். இந்த நிலையில், அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவாணி அணையின் நீர் இருப்பு 23.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 255 மி.மீ., மழையும், மலையின் அடிவாரத்தில் 34 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.