கோவை : தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) சார்பில் “டெக்ஸ்பேர்” 2019 எனும் ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களின் 4 நாள் சர்வதேச கண்காட்சி வரும் 9-ம் தேதி கோவை கொடிசியாவில் தொடங்குகிறது.
கோவை : தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) சார்பில் “டெக்ஸ்பேர்” 2019 எனும் ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களின் 4 நாள் சர்வதேச கண்காட்சி வரும் 9-ம் தேதி கோவை கொடிசியாவில் தொடங்குகிறது.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சைமா அரங்கில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதன் தலைவர் பி.நடராஜ் கூறியதாவது :- ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் 300-க்கும் மேற்பட்ட அரங்குகளில் தங்கள் பொருட்களைக் கண்காட்சியில் வைக்கப்பட உள்ளனர். மொத்தம் 250 நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்க உள்ளது. இதில், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அரியானா, பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஜவுளி இயந்திர, உதிரிபாகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் இந்த கண்காட்சியில் தங்கள் பொருட்களை கண்காட்சிக்கு வைப்பார்கள். இது தவிர சீனா, ஜப்பான், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஜவுளி இயந்திர தயாரிப்பாளர்களும் இந்த கண்காட்சியில் பங்குபெற உள்ளனர். இந்த கண்காட்சியுடன் சைமா ஃபார்ம் டு ஃபினிஷ் கண்காட்சி 2019 எனும் ஜவுளி பொருட்களின் கண்காட்சியும் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் சுமார் 50 ஜவுளி நிறுவனங்கள் தங்கள் பஞ்சு, பருத்தி விதை, நூல், துணி, ஆயத்த ஆடை, பின்னலாடை மற்றும் கைத்தறி ஆடைகளை இடம் பெற வைக்க உள்ளார்கள். கைத்தறி மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் தங்கள் தேவையான நூலை தேர்வு செய்வதற்கு இந்த கண்காட்சி பயனுள்ளதாக அமையும், என அவர் தெரிவித்தார்.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சைமா அரங்கில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதன் தலைவர் பி.நடராஜ் கூறியதாவது :- ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் 300-க்கும் மேற்பட்ட அரங்குகளில் தங்கள் பொருட்களைக் கண்காட்சியில் வைக்கப்பட உள்ளனர். மொத்தம் 250 நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்க உள்ளது. இதில், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அரியானா, பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஜவுளி இயந்திர, உதிரிபாகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் இந்த கண்காட்சியில் தங்கள் பொருட்களை கண்காட்சிக்கு வைப்பார்கள். இது தவிர சீனா, ஜப்பான், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஜவுளி இயந்திர தயாரிப்பாளர்களும் இந்த கண்காட்சியில் பங்குபெற உள்ளனர். இந்த கண்காட்சியுடன் சைமா ஃபார்ம் டு ஃபினிஷ் கண்காட்சி 2019 எனும் ஜவுளி பொருட்களின் கண்காட்சியும் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் சுமார் 50 ஜவுளி நிறுவனங்கள் தங்கள் பஞ்சு, பருத்தி விதை, நூல், துணி, ஆயத்த ஆடை, பின்னலாடை மற்றும் கைத்தறி ஆடைகளை இடம் பெற வைக்க உள்ளார்கள். கைத்தறி மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் தங்கள் தேவையான நூலை தேர்வு செய்வதற்கு இந்த கண்காட்சி பயனுள்ளதாக அமையும், என அவர் தெரிவித்தார்.