கோவை மாநகராட்சியில் ரூ. 49.60 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்

கோவை : கோவை மாநகராட்சியில் ரூ. 49.60 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார்.


கோவை : கோவை மாநகராட்சியில் ரூ. 49.60 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார்.

​இந்நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமை வகித்தார். மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் அன்புஆபிரகாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை மாநகராட்சி, தெற்கு மண்லடம், 91-வது வார்டு ஜி.ஆர்.ஜி. கார்டன் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ. 13.80 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவருடன் கூடிய சிறுவர் விளையாட்டுத்திடலையும், 90-வது வார்டு கோவைப்புதூர் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ. 9.90 லட்சம் மதிப்பில் சி.எஸ். அகாடமி பள்ளிசாலை தொடர்ச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களுடன் கூடிய எல்.இ.டி. தெருவிளக்குகளின் செயல்பாட்டினையும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.



​பின்னர், மதுக்கரை, அண்ணாநகர் பகுதியில் இப்பகுதி பொதுமக்களின் வசதிக்காக காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் செயல்படும் விதமாக பேருந்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், குடிசைமாற்று வாரியம் மூலம் ரூ. 25.90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 3 ஆழ்குழாய் கிணறுகளையும்  என ஆக மொத்தம் ரூ. 49.60 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார்.  



​இந்நிகழ்ச்சிகளில், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், உதவி ஆணையர் டி.ஆர்.ரவி, செயற்பொறியாளர் ஞானவேல், மற்றும் அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...