மழை வேண்டி மேட்டுப்பாளையம் அருகே கழுதைகளுக்கு திருமணம் செய்து விநோத வழிபாடு : திரளான மக்கள் பங்கேற்பு

கோவை : மேட்டுப்பாளையம் அருகே மழை வேண்டி, மேளதாளம் முழங்க கழுதைகளுக்கு திருமணம் செய்து கிராம மக்கள் விநோத வழிபாடு நடத்தினர்.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே மழை வேண்டி, மேளதாளம் முழங்க கழுதைகளுக்கு திருமணம் செய்து கிராம மக்கள் விநோத வழிபாடு நடத்தினர்.



தொடர்ந்து கடந்த ஜந்து ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சியால் பாதிக்கப்பட்டு வரும் இந்த கிராம மக்கள், விவசாயம் செய்யவும், குடிநீருக்கும் தண்ணீர் இன்றி அவதியடைந்து வருகின்றனர். எனவே, மழை பெய்ய வேண்டி இறைவனிடம் வேண்டும் வகையில், கழுதைகளுக்கு திருமணம் செய்து விநோத வழிபாடு நடத்த ஊர் கிராம மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

அதில், இலக்கேப்பாளையம் கிராமத்தினர் பெண் வீடாகவும், பக்கத்து கிராமமான கோவில்பாளையத்தில் மாப்பிள்ளை வீடாகவும் பாவித்து திருமணம் நடத்தபட்டது. இலக்கேபாளையம் கிராமத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் இந்த கல்யானி திருமணம் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் கழுதைகளை கொண்டு வந்து குளிப்பாட்டி பெண்ணுக்கு வளையல், பொட்டு வைத்து சேலை கட்டப்பட்டது. மாப்பிள்ளைக்கு வேட்டிகள் கட்டி அலங்காரம் செய்யபட்டது. இதனையடுத்து, கிராம மக்கள் சார்பில் முறைப்படி மாப்பிள்ளை வீடு அழைப்பு நடத்துவதுபோல் கழுதைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கோவில் வழிபாடு நடத்தப்பட்டது. சுப்பரமணியர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு கழுதைகளுக்கு ஊர் பெரியவர்கள் சார்பில் அர்ச்சகர்கள் கொண்டு தாலி கட்டி திருமண வைபவம் நடத்தப்பட்டது. நிஜ கல்யாணம் போலவே தாழிகட்டி மொய் வைத்து கிராம மக்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த கல்யாண வைபவத்தால் கிராம மக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு மழை வேண்டி வழிபட்டனர். 

இது குறித்து பேசிய இந்த கிராம மக்கள், கடந்த 1984ஆம் ஆண்டு இந்த பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டு மக்கள் தண்ணீருக்கு அவதிபட்டனர். அப்போது, ஊர் பெரியவர்கள் சார்பில் நடத்தப்பட்ட கல்யானி திருமணத்தால் மழை வந்து பஞ்சம் தீர்ந்ததாம். எனவே, இதுபோன்ற வைபவம் நடத்தப்பட்டதால் மீண்டும் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் இந்த கல்யாணம் நடைபெற்றது, என்றனர். இந்த நிகழ்ச்சியில் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...