ஆனைக்கட்டி அருகே காட்டு யானை தாக்கி மதுபோதையில் இருந்தவர் பலி : டாஸ்மாக் கடைகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

கோவை : ஆனைகட்டி அருகே மலைப்பகுதியின் சாலையில் மது போதையில் நடந்து சென்று கொண்டிருந்த 51 வயது நபர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

கோவை : ஆனைகட்டி அருகே மலைப்பகுதியின் சாலையில் மது போதையில் நடந்து சென்று கொண்டிருந்த 51 வயது நபர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.



கேரள மாநிலம் கோட்டத்துறை கிராமத்தை சேர்ந்தவர் முரளிதரன் (51). இவர் மது அருந்தி விட்டு செல்லான் (49) என்பவருடன் மூங்கில்பள்ளம் அருகே உள்ள கங்கா சாம்பர்ஸ் பகுதியில் நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் தண்ணீர் அருந்துவதற்காக காட்டு யானைகள் கூட்டமாக வந்துள்ளன. இருவரும் மதுபோதையில் இருந்ததால், யானைகளை அவர்கள் கவனிக்கவில்லை.



இந்த நிலையில், இருவரையும் காட்டு யானை தாக்கியுள்ளது. இதில், முரளிதரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். செல்லான் மட்டும் அங்கிருந்து காயங்களுடன் தப்பிச் சென்றார்.

இதனிடையே, காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள ஆனைகட்டி போன்ற மலை நகரப்பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...