கோவை : தி.மு.க. இளைஞரணி துவங்கி 40வது ஆண்டையொட்டி, கோவை சிங்காநல்லூரில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தளபதி இளங்கோ தலைமையில் தி.மு.க.வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
கோவை : தி.மு.க. இளைஞரணி துவங்கி 40வது ஆண்டையொட்டி, கோவை சிங்காநல்லூரில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தளபதி இளங்கோ தலைமையில் தி.மு.க.வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தி.மு.க.வின் அணிகளில் முதன்மையான அணியான இளைஞரணி துவங்கி 39 ஆண்டுகளை கடந்து இன்று 40 வது ஆண்டை எட்டியுள்ளது. இதையொட்டி, இன்று, கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தளபதி இளங்கோ தலைமையில் கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் தி.மு.க.வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பட்டாசுகள் வெடித்தும், பேருந்து பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினர். இதில், தலைமை கழக பேச்சாளர்கள் பிரபாகரன், சிங்கை செளந்தர், வடக்கு கழக செயலாளர்கள் ராஜேந்திரகுமார், பாபு பூவேந்திரன், காயத்திரி பாலன், மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க.வின் அணிகளில் முதன்மையான அணியான இளைஞரணி துவங்கி 39 ஆண்டுகளை கடந்து இன்று 40 வது ஆண்டை எட்டியுள்ளது. இதையொட்டி, இன்று, கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தளபதி இளங்கோ தலைமையில் கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் தி.மு.க.வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பட்டாசுகள் வெடித்தும், பேருந்து பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினர். இதில், தலைமை கழக பேச்சாளர்கள் பிரபாகரன், சிங்கை செளந்தர், வடக்கு கழக செயலாளர்கள் ராஜேந்திரகுமார், பாபு பூவேந்திரன், காயத்திரி பாலன், மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.