மும்மொழி கொள்கையை மாநில அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் : கோவை எம்.பி. நடராஜன் வலியுறுத்தல்

கோவை : மும்மொழி கொள்கையை மாநில அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் என கோவை எம்.பி. நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை : மும்மொழி கொள்கையை மாநில அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் என கோவை எம்.பி. நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.



அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் வங்கி ஓய்வூதியர்களுக்கும் பென்சன் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியத்தை 30 % உயர்த்த வேண்டும், காப்பீட்டு பிரிமியத்தை வங்கி நிர்வாகமே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களின் ஒரு நாள் தர்ணா போராட்டம் கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகர பகுதிக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் உள்ள பயோ மெட்ரிக் பதிவேட்டில் இந்தி இருப்பது, கண்டனத்திற்குறியது. மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது. மும்மொழி கொள்கையை மாநில அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும், என்றார்.



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...