கோவை : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
கோவை : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
கேரள பருவமழையின் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவையின் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த நில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், 49.50 அடியைக் கொண்ட சிறுவாணி அணையின் நீர்மட்டமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று 15.65 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 16.40 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 72 மி.மீ. மழையும், சிறுவாணி மழை அடிவாரத்தில் 8 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
கேரள பருவமழையின் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவையின் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த நில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், 49.50 அடியைக் கொண்ட சிறுவாணி அணையின் நீர்மட்டமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று 15.65 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 16.40 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 72 மி.மீ. மழையும், சிறுவாணி மழை அடிவாரத்தில் 8 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.