கோவை : பொது அமைதியை கேள்விக்குறியாக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
கோவை : பொது அமைதியை கேள்விக்குறியாக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
சமீபகாலமாக நாடு முழுவதும் மத அடிப்படையிலான தாக்குதல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த மத அடிப்படையிலான தாக்குதல்கள் தமிழகத்தில் இல்லாத சூழலில், தற்போது இங்கும் தலைதூக்குவதாக இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதில், இஸ்லாமிய இளைஞர்களை திட்டமிட்டு தாக்கும் குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் புகார் மனு அளித்துள்ளனர்.
அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது :- குண்டர்களால் இஸ்லாமிய இளைஞர்கள் அடிக்கடி தாக்கப்படுவது இஸ்லாமிய இளைஞர்களின் நிம்மதியைக் கெடுத்து அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. அதேபோல. கடந்த 7-ம் தேதி இரவு பணி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த ஜாபர் அராபத் என்ற இளைஞரை 8 பேர் கொண்ட குண்டர்கள் வழிமறித்து வேண்டுமென்றே கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதேபோல, கடந்த 2-ம் தேதி ரூக்சனா என்ற பெண்மணி இரண்டு இளைஞர்களுடன் வரும்போது ஷேக் என்ற நபர் அவர்களிடம் பேசியுள்ளார். அப்போது, சபியுல்லா என்பவர் அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தார். ஆனால், இந்த விவகாரத்தில் அந்தப் பெண் கொடுத்த பொய்யான புகாரின் பேரில், குனியமுத்தூர் போலீசார் எந்த விசாரணையும் செய்யாமல் இஸ்லாமிய இளைஞர்களை சிறையில் அடைத்து விட்டனர். இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் இஸ்லாமிய இளைஞர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர்.
மேலும், சிறையில் இருந்த சபியுல்லா மற்றும் ஷேக் ஆகியோரின் மத அடிப்படையிலான தாடியை வலுக்கட்டாயமாக சிறைத்துறை போலீசார் நீக்கியுள்ளனர். இந்த விவகாரம் சிறையில் இஸ்லாமியர்கள் மத அடையாளங்களைப் பின்பற்ற முடியாத நிலையை உருவாக்குகிறது. இந்த நிலையில், மாநகர காவல் ஆணையாளர் விசாரணை மேற்கொண்டு பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த புகார் மனு கொடுப்பதற்காக இஸ்லாமிய இயக்கங்கள், கட்சியினர், ஜமாத்தினர் என 30-க்கும் மேற்பட்டோர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.
சமீபகாலமாக நாடு முழுவதும் மத அடிப்படையிலான தாக்குதல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த மத அடிப்படையிலான தாக்குதல்கள் தமிழகத்தில் இல்லாத சூழலில், தற்போது இங்கும் தலைதூக்குவதாக இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதில், இஸ்லாமிய இளைஞர்களை திட்டமிட்டு தாக்கும் குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் புகார் மனு அளித்துள்ளனர்.
அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது :- குண்டர்களால் இஸ்லாமிய இளைஞர்கள் அடிக்கடி தாக்கப்படுவது இஸ்லாமிய இளைஞர்களின் நிம்மதியைக் கெடுத்து அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. அதேபோல. கடந்த 7-ம் தேதி இரவு பணி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த ஜாபர் அராபத் என்ற இளைஞரை 8 பேர் கொண்ட குண்டர்கள் வழிமறித்து வேண்டுமென்றே கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதேபோல, கடந்த 2-ம் தேதி ரூக்சனா என்ற பெண்மணி இரண்டு இளைஞர்களுடன் வரும்போது ஷேக் என்ற நபர் அவர்களிடம் பேசியுள்ளார். அப்போது, சபியுல்லா என்பவர் அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தார். ஆனால், இந்த விவகாரத்தில் அந்தப் பெண் கொடுத்த பொய்யான புகாரின் பேரில், குனியமுத்தூர் போலீசார் எந்த விசாரணையும் செய்யாமல் இஸ்லாமிய இளைஞர்களை சிறையில் அடைத்து விட்டனர். இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் இஸ்லாமிய இளைஞர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர்.
மேலும், சிறையில் இருந்த சபியுல்லா மற்றும் ஷேக் ஆகியோரின் மத அடிப்படையிலான தாடியை வலுக்கட்டாயமாக சிறைத்துறை போலீசார் நீக்கியுள்ளனர். இந்த விவகாரம் சிறையில் இஸ்லாமியர்கள் மத அடையாளங்களைப் பின்பற்ற முடியாத நிலையை உருவாக்குகிறது. இந்த நிலையில், மாநகர காவல் ஆணையாளர் விசாரணை மேற்கொண்டு பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த புகார் மனு கொடுப்பதற்காக இஸ்லாமிய இயக்கங்கள், கட்சியினர், ஜமாத்தினர் என 30-க்கும் மேற்பட்டோர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.