கோவை : வேட்டை தடுப்பு காவலர்களுக்கான பணியிடங்களைத் தேர்வு மூலம் நிரப்பும் அரசின் முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி கோவை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள வேட்டை தடுப்பு காவலர்கள் இன்று ஒருநாள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை : வேட்டை தடுப்பு காவலர்களுக்கான பணியிடங்களைத் தேர்வு மூலம் நிரப்பும் அரசின் முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி கோவை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள வேட்டை தடுப்பு காவலர்கள் இன்று ஒருநாள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக வனவியல் மற்றும் வனவிரிவாக்கல் பிரிவின் கீழ் பணியாற்றி வரும் வேட்டை தடுப்பு காவலர்களை, தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் இந்த ஒருநாள் போராட்டம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் டாடாபாத் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது, வேட்டை தடுப்பு காவலர்களுக்கான பணியிடங்களைத் தேர்வு மூலம் நிரப்பும் அரசின் முடிவால், எதிர்காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்படும் சூழல் உருவாகும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

"நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உயிரை பிணையம் வைத்து வேலை செய்து வருகிறோம். பெரும்பாலான வேட்டை தடுப்பு காவலர்கள், யானை உள்ளிட்ட ஆபத்தான விலங்குகளை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, நாங்கள் வன கண்காணிப்பாளர் போன்ற பதவிக்கு தகுதி வாய்த்துள்ளோம். ஆனால், ஆனால், தமிழக அரசு அறிமுகல் செய்துள்ள புதியமுறை எங்களுக்கு அநீதியை இழக்கும் வகையில் உள்ளது," என்கின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
"சமூக வனவியல் மற்றும் வனவிரிவாக்கல் பிரிவின் கீழ் பணியாற்றும் 1,119 வேட்டை தடுப்பு காவலர்களில் 144 பேர் மட்டுமே பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்," என வேட்டை தடுப்பு காவலர் ஒருவர் கூறினார்.

உயர் அதிகாரிகளின் அழுத்தத்தால் அதிவிரைவு படையினர் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.