கோவையில் உடல் உறுப்புகளை குறுகிய நேரத்தில் மருத்துவமனைகளை சென்றடைய பசுமை வழிச் சாலைகள் அறிமுகம்

கோவை : தானம் செய்யப்படும் உடல் உறுப்புகள் குறுகியே நேரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லும் விதமாக, பசுமை வழிச்சாலைகள் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.


கோவை : தானம் செய்யப்படும் உடல் உறுப்புகள் குறுகியே நேரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லும் விதமாக, பசுமை வழிச்சாலைகள் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது. 



சி.ஐ.ஐ. மற்றும் ஒய்.ஐ. சார்பில் கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த அறிமுக நிகழ்ச்சியில் காவல்துறை, விமான நிலையம் மற்றும் பல்வேறு மருத்துவமனையைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குறைந்த நேரத்தில் தானம் செய்யப்பட்ட உறுப்புகளை மருத்துவமனைகளுக்குச் சென்றடையச் செய்து, மனித உயிர்களைக் காப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த பசுமை வழிச்சாலைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 



இது தொடர்பாக, கோவை விமான நிலைய இயக்குநர் ஆர். மகாலிங்கம் கூறுகையில், "இந்தப் பணியின் போது பல்வேறு தரப்பினர் ஒருங்கிணைந்து பணியாற்றுவார்கள். எந்தவித சிக்கலும் இன்றி கோவை விமான நிலையத்தில் இருந்து உடல் உறுப்புகள் சென்றடைய வேண்டிய பகுதி வரையில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். இந்த பசுமை வழிச் சாலை திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது மிகவும் அத்தியாவசியமானதாகும்," என்றார். 



இதைத் தொடர்ந்து, கோவை மாநகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை ஆணையாளர் பெருமாள், உடல் உறுப்புகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு குறைந்த நேரத்தில் சென்றடைவதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க தயாராக இருப்பதாக உறுதியளித்தார். 



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...