கோவை : கோவை மாநகராட்சியில் அதிகளவிலான குப்பைகளை உருவாக்கும் நிறுவனங்களோ அல்லது குடியிருப்புகளோ, அவர்களே அதனை கையாள வேண்டும் எனவும், ஆகஸ்ட் மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி : கீழ் கோத்தகிரியில் வனப்பகுதிக்கு அருகே கால்நடை மேய்ச்சலுக்காக சென்ற முதியவர் காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி கண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் பாலன் (66). இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை வனத்திற்கு அருகில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் இருந்த காட்டு யானை ஒன்று அவரை தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். நேற்று இரவு முழுவதும் பாலன் வீட்டிற்கு திரும்பி வராததால், உறவினர்கள் இன்று பாலனை காட்டுப் பகுதியில் தேடினர். அப்போது, அவர் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது தொடர்பாக வனத்துறை மற்றும் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், பாலனின் உடலைக் கைப்பற்றி கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தற்போது அதிக அளவில் யானைகள் நடமாடி வருவதாகவும், யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி கண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் பாலன் (66). இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை வனத்திற்கு அருகில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் இருந்த காட்டு யானை ஒன்று அவரை தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். நேற்று இரவு முழுவதும் பாலன் வீட்டிற்கு திரும்பி வராததால், உறவினர்கள் இன்று பாலனை காட்டுப் பகுதியில் தேடினர். அப்போது, அவர் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது தொடர்பாக வனத்துறை மற்றும் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், பாலனின் உடலைக் கைப்பற்றி கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தற்போது அதிக அளவில் யானைகள் நடமாடி வருவதாகவும், யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.