நீலகிரி : உதகை அருகே உள்ள பார்சன்ஸ் வேலி அணைப்பகுதியில் சடலமாகக் கிடந்த புலியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ததில், பிளேடை விழுங்கிய மானை வேட்டையாடியதால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு புலி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
நீலகிரி : உதகை அருகே உள்ள பார்சன்ஸ் வேலி அணைப்பகுதியில் சடலமாகக் கிடந்த புலியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ததில், பிளேடை விழுங்கிய மானை வேட்டையாடியதால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு புலி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய பார்சன்ஸ் வேலி அணைப்பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வன அதிகாரிகள் புலியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த பிரேதப் பரிசோதனையில் புலியின் வயிற்றில் மான் இறைச்சியுடன் பிளேடு துண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து வன ஆர்வலர் மோகன்ராஜ் கூறும்போது :- இப்பகுதியில் உள்ள தீட்டுக்கல் குப்பை கிடங்கில் உதகை நகராட்சிப் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகள் கொட்டப்படுவது வழக்கம். இதில் இருந்த உணவுப் பொருட்களை மேய்ந்து கொண்டிருந்த மான் பிளேடு துண்டுடன் சேர்ந்து உணவினை உட்கொண்டுள்ளது. அப்போது புலி, மானை வேட்டையாடி உண்டதில் பிளேடு துண்டு மானின் இறைச்சியுடன் சேர்ந்து புலியின் வயிற்றுக்குள் சென்றதால் புலி உயிரிழந்துள்ளது, என தெரிவித்துள்ளார்.
மேலும், உணவு கழிவுகளைக் கொட்டுபவர்கள் பிளேடு போன்ற பொருட்களைக் குப்பைகளில் கொட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய பார்சன்ஸ் வேலி அணைப்பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வன அதிகாரிகள் புலியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த பிரேதப் பரிசோதனையில் புலியின் வயிற்றில் மான் இறைச்சியுடன் பிளேடு துண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து வன ஆர்வலர் மோகன்ராஜ் கூறும்போது :- இப்பகுதியில் உள்ள தீட்டுக்கல் குப்பை கிடங்கில் உதகை நகராட்சிப் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகள் கொட்டப்படுவது வழக்கம். இதில் இருந்த உணவுப் பொருட்களை மேய்ந்து கொண்டிருந்த மான் பிளேடு துண்டுடன் சேர்ந்து உணவினை உட்கொண்டுள்ளது. அப்போது புலி, மானை வேட்டையாடி உண்டதில் பிளேடு துண்டு மானின் இறைச்சியுடன் சேர்ந்து புலியின் வயிற்றுக்குள் சென்றதால் புலி உயிரிழந்துள்ளது, என தெரிவித்துள்ளார்.
மேலும், உணவு கழிவுகளைக் கொட்டுபவர்கள் பிளேடு போன்ற பொருட்களைக் குப்பைகளில் கொட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.