கோவை : பில்லூர் நீர்த்தேக்கம் அருகே காட்டெருமை தாக்கியதில் விவசாயப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முதியவர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை : பில்லூர் நீர்த்தேக்கம் அருகே காட்டெருமை தாக்கியதில் விவசாயப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முதியவர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்டி அத்திக்கடவு பகுதியைச் சேர்ந்த ஆர். மருதன் (60) என்ற முதியவர் பில்லூர் நீர்த்தேக்கம் அருகே உள்ள தனது நிலத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த காட்டெமை எதிர்பாராதவிதமாக அவரை தாக்கியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த மருதன் சம்பவ இடத்திலேயே நகர முடியாமல் படுத்துக் கிடந்தார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரை தேடி உறவினர்கள் விவசாய நிலம் உள்ள இடத்திற்கு வந்துள்ளனர். அங்கு பலத்த காயங்களுடன் கிடந்த மருதனை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள், அவரை உடனடியாக சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கண்டி அத்திக்கடவு பகுதியைச் சேர்ந்த ஆர். மருதன் (60) என்ற முதியவர் பில்லூர் நீர்த்தேக்கம் அருகே உள்ள தனது நிலத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த காட்டெமை எதிர்பாராதவிதமாக அவரை தாக்கியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த மருதன் சம்பவ இடத்திலேயே நகர முடியாமல் படுத்துக் கிடந்தார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரை தேடி உறவினர்கள் விவசாய நிலம் உள்ள இடத்திற்கு வந்துள்ளனர். அங்கு பலத்த காயங்களுடன் கிடந்த மருதனை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள், அவரை உடனடியாக சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.