கோவை : சாய்பாபா கோவில் அருகே போக்குவரத்து போலீசாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலையில் படுத்து உருண்டு ஆர்ப்பாட்டம் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை : சாய்பாபா கோவில் அருகே போக்குவரத்து போலீசாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலையில் படுத்து உருண்டு ஆர்ப்பாட்டம் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சாய்பாபாகோவில் பகுதியில் கடந்த 11-ம் தேதி போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயம், தலைக்கவசம் அணியாமல் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவரது மகன் பழனி மற்றும் அவரது சகோதரர் புரோட்டா மாஸ்டர் மூர்த்தி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இருவரும் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, காவலர்கள் அவர்களது வாகனத்தை தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பழனி, மூர்த்தி ஆகியோர் சாலையின் நடுவே படுத்து போராட்டம் நடத்தினர். மேலும், போலீசார் டிராபிக்கினை மதிப்பதாக இருந்தால், எல்லோரையும் சோதனை பண்ண வேண்டுமெனக் கூறி சாலையின் நடுவே படுத்து உருண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திருவெண்ணைநல்லூர் பகுதியில் வைத்து பழனி மற்றும் மூர்த்தியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 341, 353 ,506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.