கோவை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல் : அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

கோவை : சரவணம்பட்டி அருகே உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை : சரவணம்பட்டி அருகே உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள காந்திபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகளவில் லஞ்சப்பணம் புழங்குவதாக வந்த ரகசிய தகவலின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சார் பதிவாளர் அம்சவேணி மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரத்தில் கூறும்பொழுது :- சோதனையைத் தொடர்ந்து அந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்த பொறுப்பு சார்பதிவாளர் அம்சவேணி (43), உதவியாளர் லோகத்தாள் (50), இளநிலை உதவியாளர் வெங்கடேஸ்வரி (38), உதவியாளர் சாமுண்டீஸ்வரி (50), அலுவலக உதவியாளர் தியாகராஜன் (38), ஆகியோர் மீது அரசு ஊழியர் கணக்கில் வராத பணம் வைத்திருந்தது தொடர்பாக 41 prevention act, 41 read with 102 of crpc ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விசாரணை தொடர்பாக குற்றப் பத்திரிக்கை தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படும், என தெரிவித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...