நீலகிரி : நீலகிரி மாவட்டம் விபத்தில்லா மாவட்டமாக அறிவிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாளை (17-ம் தேதி) விபத்தி்ல்லா நாளாக அனுசரிக்கப்படவுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் விபத்தில்லா மாவட்டமாக அறிவிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாளை (17-ம் தேதி) விபத்தி்ல்லா நாளாக அனுசரிக்கப்படவுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் கூறியதாவது :- மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் அதிக மலை பாதைகளையும், கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்ட மாவட்டமாகும். மேலும், சுற்றுலா மாவட்டமாக திகழ்வதால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வெளிநாடு மற்றும் உள்நாடு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் கல்லட்டி மலைப்பாதை, குன்னூர், மேட்டுப்பாளையம் மலைப்பாதை, கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மலைப்பாதை மற்றும் கூடலூர், உதகை மலைப்பாதை வழியாக தான் உதகைக்கு வருவதால், அவர்களுக்கு மலைப்பாதையில் எவ்வாறு வாகனம் இயக்க வேண்டும் என்பது அவ்வளவாக தெரிவதில்லை. இதனால், விபத்தில் வாகனங்கள் சிக்கி உயிர்கள் பலியாகுவதும், படுகாயங்கள் ஏற்படுவதும் வாடிக்கையாகவே உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பலகைகள் அனைத்து சாலைகளிலும் வைக்கப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். இதன் விளைவாக இந்தாண்டு விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் நீலகிரி மாவட்டத்தில் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவது குறித்தும், சீட்பெல்ட் அணிவது குறித்தும் துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி நீலகிரி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக அறிவிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும். நாளை (ஜுலை 17) விபத்தில்லா நாளாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டு, தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது குறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம், என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் கூறியதாவது :- மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் அதிக மலை பாதைகளையும், கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்ட மாவட்டமாகும். மேலும், சுற்றுலா மாவட்டமாக திகழ்வதால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வெளிநாடு மற்றும் உள்நாடு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் கல்லட்டி மலைப்பாதை, குன்னூர், மேட்டுப்பாளையம் மலைப்பாதை, கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மலைப்பாதை மற்றும் கூடலூர், உதகை மலைப்பாதை வழியாக தான் உதகைக்கு வருவதால், அவர்களுக்கு மலைப்பாதையில் எவ்வாறு வாகனம் இயக்க வேண்டும் என்பது அவ்வளவாக தெரிவதில்லை. இதனால், விபத்தில் வாகனங்கள் சிக்கி உயிர்கள் பலியாகுவதும், படுகாயங்கள் ஏற்படுவதும் வாடிக்கையாகவே உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பலகைகள் அனைத்து சாலைகளிலும் வைக்கப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். இதன் விளைவாக இந்தாண்டு விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் நீலகிரி மாவட்டத்தில் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவது குறித்தும், சீட்பெல்ட் அணிவது குறித்தும் துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி நீலகிரி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக அறிவிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும். நாளை (ஜுலை 17) விபத்தில்லா நாளாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டு, தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது குறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம், என அவர் தெரிவித்தார்.