கோவை : கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை : கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது :- வடதமிழகம் முதல் தென் தமிழகம் வரை வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுவையின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, தேனி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த மழை அடுத்த 3 நாட்களுக்கு நீடிக்கும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. போரூரில் 8 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் சராசரியாக 6 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகம், புதுவையில் மழை நீடிக்கும். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 31% குறைவாக பெய்துள்ளது, என கூறியுள்ளார்.