நீலகிரி : மஞ்சூர் பகுதியில் சாலையில் உலா வந்த கரடியை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி : மஞ்சூர் பகுதியில் சாலையில் உலா வந்த கரடியை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் இருந்து வருகின்றன. இவை அவ்வப்போது உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில், இன்று இப்பகுதி இளைஞர்கள், மஞ்சூர் கைகாட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, சாலையின் முன்னே கரடி ஒன்று சென்று கொண்டிருப்பதைக் கண்டு அச்சமடைந்தனர், பின்னர், கரடியை பின் தொடர்ந்தவாறு தங்களது செல்போனில் படமெடுத்தனர். சிறிது தூரம் முக்கிய சாலையில் ஓடிய கரடி அங்கிருந்து தனியார் எஸ்டேட்டுக்குள் புகுந்து விட்டது.

இந்த முக்கிய சாலையின் வழியாக தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர் வந்து செல்வதால், இந்த சாலையில் உலா வரும் இந்த கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் இருந்து வருகின்றன. இவை அவ்வப்போது உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில், இன்று இப்பகுதி இளைஞர்கள், மஞ்சூர் கைகாட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, சாலையின் முன்னே கரடி ஒன்று சென்று கொண்டிருப்பதைக் கண்டு அச்சமடைந்தனர், பின்னர், கரடியை பின் தொடர்ந்தவாறு தங்களது செல்போனில் படமெடுத்தனர். சிறிது தூரம் முக்கிய சாலையில் ஓடிய கரடி அங்கிருந்து தனியார் எஸ்டேட்டுக்குள் புகுந்து விட்டது.

இந்த முக்கிய சாலையின் வழியாக தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர் வந்து செல்வதால், இந்த சாலையில் உலா வரும் இந்த கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.