திருப்பூர் : திருப்பூரில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல், பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட செந்தில் நகர் நிறுவனத்தார் மற்றும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
திருப்பூர் : திருப்பூரில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல், பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட செந்தில் நகர் நிறுவனத்தார் மற்றும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் - பல்லடம் சாலை அறிவொளி நகர் பகுதியில், செந்தில் நகர் என்ற ப்ரமோட்டார்ஸ் சார்பில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு, வீட்டு மனைகள் அப்பகுதியில் துவங்கப்பட்டது. தற்போது 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ரூ. 5 லட்சம் ரூ. 7 லட்சம் மதிப்பிலான வீடுகளை வாங்கியுள்ளனர். இதனிடையே, வீட்டுமனைகள் வாங்கும்போது ஆசைவார்த்தை கூறிய நிறுவனத்தார், கடந்த நான்கு வருடங்களாக குடிநீர், சாலை, மின்விளக்கு என எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தராமல் செந்தில்நகர் ப்ரமோட்டார்ஸ் ஏமாற்றி வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், முழு தொகையும் செலுத்திய பொதுமக்களுக்கு வீட்டு மனைகளை வழங்காமல், வருடக் கணக்கில் இழுத்தடிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே மாவட்ட .நிர்வாகம் இப்பிரச்சனையில் தலையிட்டு, பணம் செலுத்திய பொதுமக்கள் அனைவருக்கும், வீட்டுமனைகள் வழங்க வேண்டும் என்றும், மோசடியில் ஈடுபட்ட செந்தில் நகர் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 50-க்கும்.மேற்பட்டோர், திருப்பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

திருப்பூர் - பல்லடம் சாலை அறிவொளி நகர் பகுதியில், செந்தில் நகர் என்ற ப்ரமோட்டார்ஸ் சார்பில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு, வீட்டு மனைகள் அப்பகுதியில் துவங்கப்பட்டது. தற்போது 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ரூ. 5 லட்சம் ரூ. 7 லட்சம் மதிப்பிலான வீடுகளை வாங்கியுள்ளனர். இதனிடையே, வீட்டுமனைகள் வாங்கும்போது ஆசைவார்த்தை கூறிய நிறுவனத்தார், கடந்த நான்கு வருடங்களாக குடிநீர், சாலை, மின்விளக்கு என எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தராமல் செந்தில்நகர் ப்ரமோட்டார்ஸ் ஏமாற்றி வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், முழு தொகையும் செலுத்திய பொதுமக்களுக்கு வீட்டு மனைகளை வழங்காமல், வருடக் கணக்கில் இழுத்தடிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே மாவட்ட .நிர்வாகம் இப்பிரச்சனையில் தலையிட்டு, பணம் செலுத்திய பொதுமக்கள் அனைவருக்கும், வீட்டுமனைகள் வழங்க வேண்டும் என்றும், மோசடியில் ஈடுபட்ட செந்தில் நகர் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 50-க்கும்.மேற்பட்டோர், திருப்பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.