திருப்பூர் : புதிதாக தொழில் தொடங்குவதாகக் கூறி மனைவியின் பெயரில் கடனைப் பெற்றுக் கொண்டு, வேறொரு பெண்ணுடன் தப்பியோடி கணவரை மீட்டுத் தரக் கோரி திருப்பூர் காவல்நிலையம் முன்பு பாதிக்கப்பட்ட பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் : புதிதாக தொழில் தொடங்குவதாகக் கூறி மனைவியின் பெயரில் கடனைப் பெற்றுக் கொண்டு, வேறொரு பெண்ணுடன் தப்பியோடி கணவரை மீட்டுத் தரக் கோரி திருப்பூர் காவல்நிலையம் முன்பு பாதிக்கப்பட்ட பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூரை அடுத்த ராக்கியாபாளையம் பகுதியைச் சேர்ந்த அன்னபூரணி -- செந்தில்குமார் தம்பதியினர். திருமணமாகி 23 வருடங்களாகிய நிலையில், செந்தில்குமார் புதிதாக தொழில் துவங்குவதாக தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய அன்னபூரணியும், சுய உதவி குழுக்கள், தனியார் நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கடன் வாங்கி தனது கணவரிடம் கொடுத்துள்ளார். இந்த நிலையில், செந்தில்குமார் அதே பகுதியைச் சேர்ந்த மீனாகுமாரி என்ற பெண்ணுடன் கடந்த வாரம் தலைமறைவாகியுள்ளார்.

இதனிடையே, கடன் கொடுத்தவர்கள், அன்னபூரணியிடம் கடன் கேட்டு தகாத வார்த்தைகளால் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அன்னபூரணி, திருமுருகன்பூண்டி காவல்நிலையத்தில் தனது கணவரை மீட்டு கொடுக்கும்படி புகார் அளித்துள்ளார். ஆனால், அவரது புகார் மீது போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறியதாகக் கூறப்படுகிறது. அதன்படி, இன்று திருப்பூர் வடக்கு காவல்நிலையத்திற்கு வந்த அன்னபூரணியிடம், மீண்டும் திருமுருகன்பூண்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்படி போலீசார் கூறியுள்ளனர்.
இதனால், மனமுடைந்த அன்னபூரணி, போலீசார் அங்கும் இங்கும் தன்னை அலைக்கழிப்பதாக கூறியும், தனது கணவரை உடனடியாக மீட்டுத்தரப்படி கூறியும் திருப்பூர் வடக்கு காவல்நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, வடக்கு காவல்நிலைய போலீஸார், திருமுருகன்பூண்டி காவல்நிலையத்திற்கு தொடர்பு கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கூறியதைத் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு அன்னபூரணி, போராட்டத்தைக் கைவிட்டார்.

திருப்பூரை அடுத்த ராக்கியாபாளையம் பகுதியைச் சேர்ந்த அன்னபூரணி -- செந்தில்குமார் தம்பதியினர். திருமணமாகி 23 வருடங்களாகிய நிலையில், செந்தில்குமார் புதிதாக தொழில் துவங்குவதாக தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய அன்னபூரணியும், சுய உதவி குழுக்கள், தனியார் நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கடன் வாங்கி தனது கணவரிடம் கொடுத்துள்ளார். இந்த நிலையில், செந்தில்குமார் அதே பகுதியைச் சேர்ந்த மீனாகுமாரி என்ற பெண்ணுடன் கடந்த வாரம் தலைமறைவாகியுள்ளார்.

இதனிடையே, கடன் கொடுத்தவர்கள், அன்னபூரணியிடம் கடன் கேட்டு தகாத வார்த்தைகளால் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அன்னபூரணி, திருமுருகன்பூண்டி காவல்நிலையத்தில் தனது கணவரை மீட்டு கொடுக்கும்படி புகார் அளித்துள்ளார். ஆனால், அவரது புகார் மீது போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறியதாகக் கூறப்படுகிறது. அதன்படி, இன்று திருப்பூர் வடக்கு காவல்நிலையத்திற்கு வந்த அன்னபூரணியிடம், மீண்டும் திருமுருகன்பூண்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்படி போலீசார் கூறியுள்ளனர்.
இதனால், மனமுடைந்த அன்னபூரணி, போலீசார் அங்கும் இங்கும் தன்னை அலைக்கழிப்பதாக கூறியும், தனது கணவரை உடனடியாக மீட்டுத்தரப்படி கூறியும் திருப்பூர் வடக்கு காவல்நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, வடக்கு காவல்நிலைய போலீஸார், திருமுருகன்பூண்டி காவல்நிலையத்திற்கு தொடர்பு கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கூறியதைத் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு அன்னபூரணி, போராட்டத்தைக் கைவிட்டார்.