கோவை : மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா கண் திறப்பு நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவை : மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா கண் திறப்பு நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வனபத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா நிகழ்ச்சி இன்று முதல் துவங்கி 15 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வரும் 30-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்காக இன்று அதிகாலையே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு 17 வகையான அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, கோவில் முன்பு உள்ள குண்டம் குழி கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 20 அடி நீளம் 10 அடி ஆழமுள்ள குண்டத்தை பல வண்ண மலர்களைக் கொண்டு பக்தர்கள் அலங்கரித்து இருந்தனர். இதற்கு அர்ச்சகர்கள் இன்று சிறப்பு பூஜைகள் செய்து கிடா வெட்டி குண்டம் கண் திறக்கப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் அம்மனை வணங்கி வழிபட்டனர். இன்று முதல் துவங்கிய இந்த திருவிழாவின் அம்மனுக்கு தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, 30 ஆம் தேதி காலை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வனபத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா நிகழ்ச்சி இன்று முதல் துவங்கி 15 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வரும் 30-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்காக இன்று அதிகாலையே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு 17 வகையான அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, கோவில் முன்பு உள்ள குண்டம் குழி கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 20 அடி நீளம் 10 அடி ஆழமுள்ள குண்டத்தை பல வண்ண மலர்களைக் கொண்டு பக்தர்கள் அலங்கரித்து இருந்தனர். இதற்கு அர்ச்சகர்கள் இன்று சிறப்பு பூஜைகள் செய்து கிடா வெட்டி குண்டம் கண் திறக்கப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் அம்மனை வணங்கி வழிபட்டனர். இன்று முதல் துவங்கிய இந்த திருவிழாவின் அம்மனுக்கு தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, 30 ஆம் தேதி காலை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.