கோவை : நொய்யல் பாய்ந்தோடும் வாய்க்காலில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வலர்கள் நேற்று களப்பணியில் ஈடுபட்டனர்.
கோவை : நொய்யல் பாய்ந்தோடும் வாய்க்காலில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வலர்கள் நேற்று களப்பணியில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை சீரமைத்தல் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வாரந்தோறும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் (ஜுலை 14) சுமார் 500 ஏக்கர்களுக்கு மேல் பரப்பளவு கொண்ட பேரூர் பெரியகுளம், குனியமுத்தூர், செங்குளம் ஆகிய நீர்நிலைகளுக்கு நொய்யல் நீரை கொண்டு செல்லும் விதமாக, குனியமுத்தூர் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் ஈடுபட்டனர். இதில், குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் இணைந்து தன்னார்வலர்களோடு களப்பணியில் ஈடுபட்டனர். இந்தத் தூய்மைப் பணியின் போது, சுமார் 5 டன் அளவிலான பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தி உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்தனர்.


கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை சீரமைத்தல் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வாரந்தோறும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் (ஜுலை 14) சுமார் 500 ஏக்கர்களுக்கு மேல் பரப்பளவு கொண்ட பேரூர் பெரியகுளம், குனியமுத்தூர், செங்குளம் ஆகிய நீர்நிலைகளுக்கு நொய்யல் நீரை கொண்டு செல்லும் விதமாக, குனியமுத்தூர் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் ஈடுபட்டனர். இதில், குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் இணைந்து தன்னார்வலர்களோடு களப்பணியில் ஈடுபட்டனர். இந்தத் தூய்மைப் பணியின் போது, சுமார் 5 டன் அளவிலான பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தி உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்தனர்.
