நொய்யலைப் பேணி காக்கும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் களப்பணி

கோவை : நொய்யல் பாய்ந்தோடும் வாய்க்காலில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வலர்கள் நேற்று களப்பணியில் ஈடுபட்டனர்.

கோவை : நொய்யல் பாய்ந்தோடும் வாய்க்காலில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வலர்கள் நேற்று களப்பணியில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை சீரமைத்தல் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வாரந்தோறும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் (ஜுலை 14) சுமார் 500 ஏக்கர்களுக்கு மேல் பரப்பளவு கொண்ட பேரூர் பெரியகுளம், குனியமுத்தூர், செங்குளம் ஆகிய நீர்நிலைகளுக்கு நொய்யல் நீரை கொண்டு செல்லும் விதமாக, குனியமுத்தூர் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் ஈடுபட்டனர். இதில், குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் இணைந்து தன்னார்வலர்களோடு களப்பணியில் ஈடுபட்டனர். இந்தத் தூய்மைப் பணியின் போது, சுமார் 5 டன் அளவிலான பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தி உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்தனர்.



Newsletter

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...