கோவை : உரிய அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைத்து லாரிகள் மூலம் தண்ணீரை விற்பனை செய்வதால் விவசாய பயிர்கள் கருகுவதாகக் கூறி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : உரிய அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைத்து லாரிகள் மூலம் தண்ணீரை விற்பனை செய்வதால் விவசாய பயிர்கள் கருகுவதாகக் கூறி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை அடுத்த பள்ளப்பாளையம் அருகே உள்ள ஒட்டர்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது :- தங்கள் பகுதியில் மாட்டுப் பண்ணை அமைக்க அனுமதி பெற்றுக்கொண்டு, பாலசுப்ரமணியன் என்பவர் ஆழ்துளை கிணறுகளை அமைத்துள்ளது. ஆனால், விவசாயம் எதுவும் செய்யாமல் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து லாரிகள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயக் கிணறுகளில் தண்ணீர் வற்றி வருகின்றது. இதன் காரணமாக, விவசாய பயிர்களான தென்னை, வாழை, கரும்பு ஆகியவை கருகி வருகிறது. விவசாயிகள் உடனடியாக தண்ணீர் விற்பனையை தடுக்க வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக தாசில்தார் மூலம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார், என விவசாயிகள் தெரிவித்தனர்.