வெள்ளகோவில் அருகே காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து : 4 பேர் பலி

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 4 பேர் பலி உயிரிழந்தனர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 4 பேர் பலி உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்தவர் முரளிக்கண்ணன். இவர் அங்குள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். வேலை செய்யும் சொர்ண மூர்த்தி, நடராஜ், சுதர்சன், பாலச்சந்திரன், சுரேஷ் ஆகியோருடன் காரைக்காலில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு இரவு புறப்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு கார் வெள்ளகோயில் அடுத்த வேலப்ப நாயகன் வலசு பிரிவு என்ற இடத்தில் சென்ற போது, நிலைதடுமாறி எதிரே திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் முரளிகண்ணன், சொர்ண மூர்த்தி, நடராஜ், சுதர்சன் ஆகியோர் காருக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். உடன் சென்ற பாலசந்தர் மற்றும் சுரேஷ் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...