கோவை : மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவில் ராஜகோபுர பணிகளை விரைந்து முடிக்க கோரியும், கோவில்களில் ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரியும் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை : மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவில் ராஜகோபுர பணிகளை விரைந்து முடிக்க கோரியும், கோவில்களில் ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரியும் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வன பத்திரகாளியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ஏழு நிலை ராஜகோபுரம் கட்ட இரண்டு ஆண்டுக்கு முன் பூமி பூஜை நடத்தி பணிகள் துவங்கிய நிலையில், முதல்கட்ட பணியுடன் அப்பணிகள் முடங்கியுள்ளன. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைவதுடன், ராஜ கோபுர பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் ஆக்கரமிப்பு செய்வதை தடுக்கவும், ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தின் முன்பு நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, 40 கோடிக்கும் மேல் கோவிலுக்கு சொந்தமாக பணம் இருந்தும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராமல் பக்தர்கள் அவதிப்படுவதாக குற்றம்சாட்டினர். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் அறங்காவலர் குழு நியமித்துள்ள நிலையில், வனபத்ரகாளியம்மன் கோயிலுக்கு மட்டும் இன்னும் அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதற்கு ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கட்டண தரிசனம் என்ற பெயரில் பக்தர்கள் மூலம் தமிழகம் முழுவதும் கொள்ளையடிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய நிலையில், கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இலவச தரிசன முறை உள்ளது போல் தமிழகத்திலும் இலவச தரிசன முறையை அமல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வன பத்திரகாளியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ஏழு நிலை ராஜகோபுரம் கட்ட இரண்டு ஆண்டுக்கு முன் பூமி பூஜை நடத்தி பணிகள் துவங்கிய நிலையில், முதல்கட்ட பணியுடன் அப்பணிகள் முடங்கியுள்ளன. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைவதுடன், ராஜ கோபுர பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் ஆக்கரமிப்பு செய்வதை தடுக்கவும், ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தின் முன்பு நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, 40 கோடிக்கும் மேல் கோவிலுக்கு சொந்தமாக பணம் இருந்தும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராமல் பக்தர்கள் அவதிப்படுவதாக குற்றம்சாட்டினர். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் அறங்காவலர் குழு நியமித்துள்ள நிலையில், வனபத்ரகாளியம்மன் கோயிலுக்கு மட்டும் இன்னும் அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதற்கு ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கட்டண தரிசனம் என்ற பெயரில் பக்தர்கள் மூலம் தமிழகம் முழுவதும் கொள்ளையடிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய நிலையில், கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இலவச தரிசன முறை உள்ளது போல் தமிழகத்திலும் இலவச தரிசன முறையை அமல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.