நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் ஜப்பான் நாட்டின் தேசிய பழமான பெர்சிமன் பழத்தின் சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் ஜப்பான் நாட்டின் தேசிய பழமான பெர்சிமன் பழத்தின் சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பேரி, ஆரஞ்சு, பீச், பிளம், எலுமிச்சை, லிச்சி உள்ளிட்ட ஏராளமான பழ மரங்கள் உள்ளன. இதில், அரிய வகை "பெர்சிமன்' பழ மரங்களும் உள்ளன. இப்பூங்காவில் 109 பெர்சிமன் பழ மரங்கள் உள்ளன. இம்மரங்களில் தற்போது சீசன் துவங்கியுள்ளது. பெர்சிமன் பழங்கள் கொத்துக் கொத்தாக காய்த்து தொங்குகின்றன.

பொதுவாக, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் வரை பெர்சிமன் பழ சீசன் இருக்கும் . ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட இப்பழம், ஜப்பான் நாட்டின் தேசிய பழமாகவும் உள்ளது. தக்காளி போன்ற தோற்றத்தை கொண்ட இப்பழத்தில் வைட்டமின் "ஏ' மற்றும் "பி' சத்து நிறைந்துள்ளது. இப்பழங்கள் மற்ற பழங்களை போன்று மரத்திலேயே பழுப்பதில்லை. மாறாக, காய் வடிவில் பறிக்கப்படும் இப்பழத்தை "எத்தனால்' என்ற திரவத்தில் ஊற வைத்தால் , இரண்டு நாள் கழித்து தான் பழுக்கும்.

தென் மாநில அளவில் குன்னூர் சிம்ஸ் பூங்கா தோட்ட கலைப் பண்ணையில் மட்டும் தான் இப்பழ மரங்கள் உள்ளன. இப்பழங்கள் கிலோ 150 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. பழ மர நாத்துகளும் தோட்டக்கலைப் பண்ணையில் விற்கப்படுகின்றன. பெர்சிமன் பழ சீசன் துவங்கியுள்ளது குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்சியை அளித்துள்ளது.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பேரி, ஆரஞ்சு, பீச், பிளம், எலுமிச்சை, லிச்சி உள்ளிட்ட ஏராளமான பழ மரங்கள் உள்ளன. இதில், அரிய வகை "பெர்சிமன்' பழ மரங்களும் உள்ளன. இப்பூங்காவில் 109 பெர்சிமன் பழ மரங்கள் உள்ளன. இம்மரங்களில் தற்போது சீசன் துவங்கியுள்ளது. பெர்சிமன் பழங்கள் கொத்துக் கொத்தாக காய்த்து தொங்குகின்றன.

பொதுவாக, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் வரை பெர்சிமன் பழ சீசன் இருக்கும் . ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட இப்பழம், ஜப்பான் நாட்டின் தேசிய பழமாகவும் உள்ளது. தக்காளி போன்ற தோற்றத்தை கொண்ட இப்பழத்தில் வைட்டமின் "ஏ' மற்றும் "பி' சத்து நிறைந்துள்ளது. இப்பழங்கள் மற்ற பழங்களை போன்று மரத்திலேயே பழுப்பதில்லை. மாறாக, காய் வடிவில் பறிக்கப்படும் இப்பழத்தை "எத்தனால்' என்ற திரவத்தில் ஊற வைத்தால் , இரண்டு நாள் கழித்து தான் பழுக்கும்.

தென் மாநில அளவில் குன்னூர் சிம்ஸ் பூங்கா தோட்ட கலைப் பண்ணையில் மட்டும் தான் இப்பழ மரங்கள் உள்ளன. இப்பழங்கள் கிலோ 150 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. பழ மர நாத்துகளும் தோட்டக்கலைப் பண்ணையில் விற்கப்படுகின்றன. பெர்சிமன் பழ சீசன் துவங்கியுள்ளது குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்சியை அளித்துள்ளது.