மேட்டுப்பாளையத்தில் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பள்ளி மாணவர்களுக்கான மினி மாராத்தன் போட்டி

கோவை : மேட்டுப்பாளையம் அருகே மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தியும், தண்ணீரினை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தியும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மினி மாராத்தன் போட்டி நடைபெற்றது.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தியும், தண்ணீரினை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தியும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மினி மாராத்தன் போட்டி நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் உதகை சாலையில் பிளாக்தாண்டர் முன்பு இருந்து துவங்கிய இந்த மினி மாராத்தான் போட்டியினை கவிஞர் கவிதாசன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். உதகை சாலையில் துவங்கிய இந்த பேரணியானது, சுமார் 4 கிலோ மீட்டர் வரை தொடர்ந்து கல்லாரில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. இந்த மாராத்தான் போட்டியின் போது, தண்ணீரினை சேமிப்பதுடன் அவற்றை சிக்கனமாக பயன்படுத்தி தண்ணீர் தட்டுபாட்டிற்கு தீர்வு காணவும், நீர் நிலைகளை பாதுகாக்கவும் வலியுறுத்தபட்டது. மாராத்தான் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சுழல் கோப்பைகளும், பரிசுகளும் வழங்கபட்டன. இந்த நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் முரளி, கல்வி ஆலோசகர் வெ.கணேசன், பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி துணை முதல்வர் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...