கோவை : கோவையில் இன்று நடைபெற்ற மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் மூலம் 4,196 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
கோவை : கோவையில் இன்று நடைபெற்ற மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் மூலம் 4,196 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஆர். சக்திவேல் தலைமையில் மற்றும் செயலாளர் முதுநிலை சார்பு நீதிபதி என். ஷர்மிளா அவர்கள் முன்னிலையில் இன்று காலை 10.00 மணியளவில் கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இம்மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள சமரசம் செய்யக் கூடிய, சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள் மற்றும் தொழிலாளர் சம்மந்தப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவையில் இல்லாத வழக்குகள் என மொத்தம் 10,867 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 4,196 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மொத்தத் தீர்வு தொகை ரூ..23,66,06,315 ஆகும்.
இம்மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம். குணசேகரன், பி. முருகேசன், சி. சஞ்சய்பாபா, ௭. மணிமொழி, பூரண ஜெய ஆனந்த், மலர் வாலன்டினா, ஜெ. ராதிகா, எஸ். கோவிந்தராஜன், முகம்மது பரூக், எஸ். நாகராஜன், எம். அகிலா சாலினி, எஸ். ரவி மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் எஸ்.ஏ. ஸ்ரீராமுலு, வி.ராமசாமி, ஆர். தண்டபாணி, ராமசாமி, ஆர். ராஜூ மற்றும் பட்டியல் வழக்கறிஞர்கள் மூலம் இம்மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இம்மக்கள் நீதிமன்றத்தில் இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த நில ஆர்ஜித வழக்கு ஒன்றில் ராமகிருஷ்ணன் மற்றும் கோபாலகிருஷ்ணன் என்பவர்களுக்கு இந்திய உணவு கழகத்திடமிருந்து ரூபாய். 23,21,541-க்கான காசோலையை கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஆர். சக்திவேல் அவர்களால் மனுதாரருக்கு வழங்கப்பட்டது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஆர். சக்திவேல் தலைமையில் மற்றும் செயலாளர் முதுநிலை சார்பு நீதிபதி என். ஷர்மிளா அவர்கள் முன்னிலையில் இன்று காலை 10.00 மணியளவில் கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இம்மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள சமரசம் செய்யக் கூடிய, சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள் மற்றும் தொழிலாளர் சம்மந்தப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவையில் இல்லாத வழக்குகள் என மொத்தம் 10,867 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 4,196 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மொத்தத் தீர்வு தொகை ரூ..23,66,06,315 ஆகும்.
இம்மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம். குணசேகரன், பி. முருகேசன், சி. சஞ்சய்பாபா, ௭. மணிமொழி, பூரண ஜெய ஆனந்த், மலர் வாலன்டினா, ஜெ. ராதிகா, எஸ். கோவிந்தராஜன், முகம்மது பரூக், எஸ். நாகராஜன், எம். அகிலா சாலினி, எஸ். ரவி மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் எஸ்.ஏ. ஸ்ரீராமுலு, வி.ராமசாமி, ஆர். தண்டபாணி, ராமசாமி, ஆர். ராஜூ மற்றும் பட்டியல் வழக்கறிஞர்கள் மூலம் இம்மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இம்மக்கள் நீதிமன்றத்தில் இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த நில ஆர்ஜித வழக்கு ஒன்றில் ராமகிருஷ்ணன் மற்றும் கோபாலகிருஷ்ணன் என்பவர்களுக்கு இந்திய உணவு கழகத்திடமிருந்து ரூபாய். 23,21,541-க்கான காசோலையை கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஆர். சக்திவேல் அவர்களால் மனுதாரருக்கு வழங்கப்பட்டது.