2-ம் சீசனுக்காக உதகை ரோஜா பூங்காவில் ரோஜா செடிகள் மற்றும் புல் தரைகளை தயார்படுத்தும் பணிகள் தீவிரம்

நீலகிரி : இரண்டாம் சீசனுக்காக சர்வதேச புகழ் வாய்ந்த உதகை ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் வகைகளில் நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா செடிகள் மற்றும் பசுமை வாய்ந்த புல் தரைகளை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி : இரண்டாம் சீசனுக்காக சர்வதேச புகழ் வாய்ந்த உதகை ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் வகைகளில் நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா செடிகள் மற்றும் பசுமை வாய்ந்த புல் தரைகளை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



நீலகிரி மாவட்டத்தில் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கும் முதல் சீசனின் போது அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இரண்டாவது சீசனை கொண்டாட உதகைக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

இச்சமயங்களில் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை காட்டிலும் வடமாநிலங்களைச் சேர்ந்த மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருவது வழக்கம். இந்த நிலையில், முதல் சீசனுக்காக பூங்காவில் உள்ள அனைத்து மலர் செடிகளும் கவாத்து செய்யப்பட்டது. சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு அனைத்து செடிகளிலும், மலர்கள் பூத்து குலுங்கின. இம்முறை தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில், தென்மேற்கு பருவமழை பொய்த்தாலும் அவ்வப்போது பெய்த சாரல் மழையால் ரோஜா பூங்காவில் உள்ள புல் தரைகள் மற்றும் மலர் செடிகளில் பசுமை அப்படியே உள்ளது.



எனவே, அவைகளை இரண்டாம் சீசனுக்கு தயார் செய்யும் பணிகளில் தற்போது பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், புல் தரைகளை பராமரிக்கும் பணி, வளர்ந்த புற்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்முறை இரண்டாம் சீசனின் போது, ரோஜா பூங்காவில் முதல் சீசன் போன்று, 4 ஆயிரம் வகைகளில் நடவு செய்யப்பட்டுள்ள அனைத்து செடிகளிலும் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் சீசனுக்கு மட்டுமின்றி, அடுத்த இரு மாதங்கள் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் ரோஜா மலர்களை கண்டு ரசித்து செல்ல வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...