புகழ்பெற்ற மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் ஆடி குண்டம் திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்

கோவை : மேட்டுப்பாளையத்தில் புகழ்பெற்ற வனபத்திரகாளியம்மன் ஆடி குண்டம் திருவிழாவையொட்டி நடைபெற்ற அனைத்து அரசு துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில், வனவிலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க கூடுதல் ஆட்களை நியமிக்க வனத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் புகழ்பெற்ற வனபத்திரகாளியம்மன் ஆடி குண்டம் திருவிழாவையொட்டி நடைபெற்ற அனைத்து அரசு துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில், வனவிலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க கூடுதல் ஆட்களை நியமிக்க வனத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் எழுந்தருளியுள்ள 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு வன பத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா வருகின்ற 23ஆம் தேதி பூச்சாட்டுடன் துவங்க உள்ளது. கொங்கு மண்டலத்தின் மிகவும் பிரசித்திபெற்ற சுயம்பு அம்மனாக திகழும் இந்த ஆடி குண்டம் திருவிழா நிகழ்ச்சியில், ஆண்டுதோறும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு குண்டம் இறங்குவார்கள். இந்த நிலையில், விழா முன்னேற்பாடுகள் குறித்தும், பக்தர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து அனைத்து அரசு துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட வருவாய் கோட்டாச்சியர் சுரேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வனத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, தீயணைப்பு, காவல்துறை மின்சாரம், மருத்துவக்குழு உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். 

அடர்ந்த வனப்பகுதியினை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியில் பக்தர்கள் அதிகம் கூடும்போது, வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வனத்துறை சார்பில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும், அவர்கள் ரோந்து பணியினை மேற்கொள்வதுடன், வனத்தை விட்டு காட்டுயானைகள் வெளியே வராமல் எல்லையிலேயே தடுத்து கோவிலுக்குள் நுழையாமல் தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தபட்டது. மேலும், பக்தர்கள் அதிகம் கூடுவதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க 100 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்துவதுடன், 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், பக்தர்கள் புனித நீராடும் பவானி ஆற்றில் பாதுகாப்பாக நீராடவும், ஆற்றில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கினை கண்காணிக்க உரிய அதிகாரிகளை நியமித்து கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே. சின்னராஜ், பரம்பரை வசந்தா, வட்டாட்சியர் சாந்தாமணி உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...